(கு - ரை.) 1. வெள்ளில் - விளாமரம்;இங்கே பழமென்னும் மாத்திரையாய் நின்றது. மன்றமரம்: புறநா. 76, 371, 374. 4. புறநா. 21 : 6; “வன்புலக்காட்டுநாட் டதுவே” (நற். 59) 1 - 4. யானையின் கன்றும் குறத்திமகனும்: “முழந்தா ளிரும் பிடிக் கயந்தலைக் குழவி,நறவுமலி பாக்கத்துக் குறமக ளீன்ற, குறியிறைப்புதல்வரொடு மறுவந் தோடி” (குறுந். 394 : 1 - 3) 5. புலாவம்பு : “புலவுநுனைப் பகழி”(பெரும்பாண். 269); “புலவுக்கணை” (பு. வெ.10); (பு. வெ. 240) போரருங்கடிமிளை : “கடிமிளைக்குண்டுகிடங்கி, னெடுமதி னிரைஞாயி, லம்புடை யாரெயில்”(பதிற். 20 : 17 - 9); “அருங்குழுமிளை” (மதுரைக்.64) 6. புறநா. 180 : 7. 7 - 8. “பாசம், பசிப்ப மடியைக்கொளலும்” (திரி. 20) 9 - 10. புறநா. 139 : 14 - 5. (181)
|