190
விளைபதச் சீறிட நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகியுள்ளதம்
வளன்வலி யுறுக்கு முளமி லாளரொ
5டியைந்த கேண்மை யில்லா கியரோ
கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென
அன்றவ ணுண்ணா தாகி வழிநாட்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்
திருங்களிற் றொருத்த னல்வலம் படுக்கும்
10புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத்
துரனுடை யாளர் கேண்மையொ
டியைந்த வைக லுளவா கியரோ.

(பி - ம்.) 3 ‘யுடையதம்’, 8 - 9‘வேட்டெழுந்தாங், கிருங்களிற் றொருத்தல்’

திணையும் துறையும் அவை.

சோழன் நல்லுருத்திரன்(பி - ம். சோழனல்லுத்திரன்)பாட்டு.

(இ - ள்.) விளைந்த செவ்வியையுடையசிறிய இடத்தைப்பார்தது வளைந்த கதிராகிய உணவைக்கொண்டுமுழையின்கண்ணே நிறைய வைக்கும் எலிமுயன்றாற்போலும்சிறிய முயற்சியராகி உள்ள தம்முடைய செல்வத்தைநுகராது இறுகப் பிடிக்கும் உள்ளமிகுதியில்லாருடன்பொருந்திய நட்பு இல்லையாக; தறுகண்மையையுடைய கேழலாகியபன்றி தனது இடப்பக்கத்தேபட வீழ்ந்ததாக, அன்றுஅவ்விடத்து உண்ணாதாகிப் பிற்றைநாட் பெரியமலையின்கண் தனது முழையிடம் தனிமைப்பட உணவைவிரும்பியெழுந்து பெரிய களிறாகிய ஒருத்தலை நல்லவலப்பக்கத்தே படப் படுக்கும் புலிபசித்தாற்போலும்குறையில்லாத மேற்கோளையுடைய வலியையுடையோர் நட்போடுபொருந்திய நாட்கள் உளவாக-எ - று.

சீறிடமென்றது, விளைந்து முற்றியபின்அறுப்பதற்கு முன்னாகிய இடத்தை.

இல்லாகியர், உளவாகியரென்பன ஈண்டுவியங்கோட்பொருளவாய் நின்றன.


(கு - ரை.) 4 - 5. இயைபென்னுமுரிச்சொல்கூட்டமென்னும் குறிப்புணர்த்துவதற்கு மேற்கோள்; (தொல்.உரி. சூ. 11, ந.; இ. வி. சூ. 290, உரை)

10. புலிபசித்தாற் புல்லைத்தின்னாதென்பது ஒரு பழமொழி.

9 - 10. புறநா. 237 : 16 - 7; “நல்லாறொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும், அல்லனசெய்தற் கொருப்படார் - பல்பொறிய, செங்கட்புலியே றறப்பசித்துந் தின்னாவாம், பைங்கட்புனத்தபைங் கூழ்” (நீதிநெறி. 61)

6 - 11. “தொடங்குவினை தவிராவசைவி னோன்றாட், கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின்,வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த, தாழ்விலுள்ளம்” (அகநா. 29); “கடமா தொலைச்சியகானுறை வேங்கை, யிடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்”(நாலடி. 300); “வாய்வதாகிய பொருளினை வல்விரைந்தன்னோ? ஆய்வ தாய்கில ராக்குவான் புகுந்தழிப்பார்போற், காய்வ தாகிய திறத்தினாற் கதழ்ந்துதாயிடத்து, வீழ்வ தாக்கியுண் ணாதுபோ துவவிள வேங்கை”(தணிகைப்புராணம், நாடு. 43)

(190)