(கு - ரை.) 1. வேலியைச்சார்ந்துள்ள காட்டுப்பூனையால்; பார்நடை வெருகு -தான் கவர்ந்துகொள்ளுதற்குரிய கோழிமுதலியவற்றைப்பார்த்து மெல்ல நடத்தலையுடைய வெருகு; “ஈர்முள் வேலிப்புலவுநாறு முன்றில், எழுதி யன்ன கொடிபடு வெருகின்,பூளை யன்ன பொங்குமயிர்ப் பிள்ளை" (அகநா.297 : 12 - 4) என்பதையும், "வெவ்வாய் வெருகினைப்பூசை யென்றலும்" (தொல். மரபு. சூ. 68) என்பதையும்,‘படப்பை வேலியும் புதலும்பற்றி விடக்கிற்கு வேற்றுயிர்கொள்ளும்வெருகு' என்னும் பேராசிரியருரையையும் பார்க்க. 1 - 2. வெருகாகிய பகைக்கு அஞ்சியகோழிப்பேடை ; எழுவாய். 3. புலா - புலாவை ; வாயிலுள்ள தசையை; அகநா. 79 : 14. 2-3. "மனையுறை கோழிக் குறுங்காற்பேடை, வேலி வெருகின மாலை யுற்றெனப், புகுமிட னறியாதுதொகுபுடன் குழீஇப், பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந்தாஅங்கு" (குறுந். 139 : 1 - 4.) 4. சிறை - பக்கம். செற்றை - சிறுதூறு; "செற்றை வாயில்" (பெரும்பாண். 149).புடையுநள் - அடித்துத் தூத்தலையுடையளாய். 5. பருத்திப்பெண்டின் - பருத்திநூற்கும்மங்கையின்; "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன"(புறநா. 125 : 1). விளக்கத்தாற்காணப்பட்ட. 6. கவிர்ப்பூ - முள்ளுமுருங்கைப்பூ. சேவலின்- ஆண்கோழியால்; "கவிரலர் பூத்த சென்னி வாரணம்"(கல். பாயிரம், 2). தணியும் - நீங்கும். கோழிப்பேடை (2) அந்நடுக்கந் தணியும்(6) 7. "அருமிளை யிருக்கை யதுவே" (புறநா.325 : 13) 8. சேட்புலம் - நெடுந்தூரமாகிய இடம். 10. விழுக்காகியநிணம்; விழுங்குதற்குரியநிணமுமாம் ; "விழுக்கொடு வெண்ணஞ்சு" (சீவக.1584). விதவை - கூழ். 9 - 10. பெரும்பாண். 132 - 3. 11. யாணர் - புதிது. நல்லவை - நல்லஉணவுகளை. ஒராங்கு - ஒருபடியாக. 9 - 11. "உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப்படலைச், சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார், கொள்ளிவைத்த கொழுநிண நாற்றம்" (புறநா. 325 : 7 - 9) மனைவியும் (7) விருப்பினள் (12) 12. கிழவன் - தலைவன். 13. ததைய - சிதைய ; "அருஞ்சமஞ்சிதையத்தாக்கி" (புறநா. 72 : 8) ; "ததைந்த காஞ்சியொடு"(பதிற். 23 : 19) 15. ஓடை - நெற்றிப்பட்டம். 14 - 15. புறநா.334 : 8 - 10. (326)
|