(கு - ரை.) 1. புறநா. 246 : 1. ‘பல’ என்னும் சொன்முன் பிறவரின் அகரம் விகற்பித்து வருமென்பதற்கும் (நன். சூ. 169, மயிலை.), ரகரவீற்று உயர்திணைப்பெயரின் ஈற்றயலாகாரம் ஈகாரமாய் ஏற்றதற்கும் (நன். வி. சூ. 309) மேற்கோள். 2. “கரிந்தநீள் கயன்முள்ளி னரையும்” (திருவிளை. விருத்த. 20) 1-3. சொல்லுவான் குறிப்பினாற் பொருளறியவந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 268, மயிலை; நன். வி. சூ. 269. 4. ஒருவன் - யமன். 6-7. “வறுமையா, லீத லிசையா தெனினு மிரவாமை, யீத லிரட்டி யுறும்” (நாலடி. 95) பாடாண்டிணைத் துறைகளுள், ஓம்படைபற்றி வந்ததற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 30, இளம். மு. காஞ்சித்திணைத்துறைகளுள் ‘கழிந்தோரொழிந்தோர்க்குக் காட்டியமுதுமை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 19, இளம்.); ‘பல்சான்றீரே......அதுவே: இது வீடு ஏதுவாகவன்றி வீடுபேற்றுநெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது’ (தொல். புறத்திணை. சூ. 24. ந.) (195)
1. தொல். தொகைமரபு, சூ. 11, ந. பார்க்க.
|