(கு - ரை.) 1. ஊன் - இறைச்சி ; ஊண் - அடிசில். முனையின் - வெறுத்தால். 2. பாகு - வெல்லப்பாகு ; "காரகற் கூவியன் பாகொடு பிடித்த, விழைசூழ் வட்டம்" (பெரும்பாண். 377 - 8) 3. அளவுபு கலந்து - நன்றாகக்கலந்து. 1 - 3. "சுவைய, வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ" (பொருந. 107 - 8) 4. விருந்து - புதுமை. ஆற்றி - பசியைத் தணித்துக்கொண்டு. 5. சென்மோ - வருவாயாக. 1 - 5. "ஊனு மூணு முனையினென்னும் புறப்பாட்டினுள் ‘சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென’ என்பதனையும் தன்மைக் கண் ‘மோ’ வருமென இவ்வாறு அமைத்தலுமொன்று ; அன்றிப் பெரும! எம்விழவுடை நாட்டே நீ செல்லென்று சுற்றத்தார் தலைவனை நோக்கிக்கூற அப்பொருநனும் பாட்டுடைத்தலைவனை நோக்கிப் பின்னும் கூறினானாகப் பொருள் கூறுதலுமொன்று" (தொல். இடை. சூ. 27, ந.) 6. அறியுநமாக - அறிவேமாக. 6 - 7 " நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி, துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி" (மலைபடு. 559 - 60) 8. துணரியது - குலைகொண்டது ; "பைம்பாகற் பழந்துணரிய, செஞ்சுளைய கனி" (பொருந. 191 - 2). ஊழ்த்து -செவ்வியழிந்து. 9. பகர்வு - கொடுத்தல். அரில் - சிறுதூறுகள். முதுபாழில். 12. சிதாஅர் வள்பு - துண்டித்த வார் ; "சிதாஅர் வள்பினென்றெடாரி" (புறநா. 376 : 4) 14. அரலை - குற்றம். பாணியின் - பாட்டால். 17. கூலம் - பலபண்டம். 19. இவணை - இவ்விடத்துள்ளாய். 23. உறுவர் - பெரியோர். 24. அறத்துறையம்பி - தருமவோடம் ; "பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம், அறவிநாவாய்" (மணி. 11 : 24 - 5) மகன் (26) படர்கென்றோனே (21) மு. தொல். புறத்திணை. சூ. 30, இளம். ; சூ. 30, ந. மேற். (381)
|