(கு - ரை.) 1. மு. அகநா. 326 : 4; பெரும்பாண்.397. கடியென்னும் உரிச்சொல் விரைவுப் பொருளை உணர்த்துமென்பதற்குமேற்கோள்; தொல். உரி. சூ. 85, ந.; இ. வி. சூ.282, உரை. 1 - 3. பகைவர் மதிலையழித்துக்கழுதையேரால் உழுது வெள்ளை வரகும் கொள்ளும் வித்துதல்மரபு; புறநா. 392 : 9 - 11; “எழுதெழின் மாடத் திடனெலாநூறிக், கழுதையேர் கையொளிர்வேல் கோலா - உழுததற்பின்,வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்,கள்விரவு தாரான் கதம்” (பு. வெ. 120); “வடதிசைமன்னர் மன்னெயின் முருக்கிக், கவடி வித்திய கழுதையேருழவன்” (சிலப். 27 : 225 - 6) ; “இடித்து வெளிசெய்துநக ரெங்கணு நுழைந்தாங், கடுத்தமட வார்வயிறலைத்தன ரிரங்கக், கொடுத்திடு வளங்கள் பல கொள்ளைக்கொடுமண்ணின், எடுத்துவரு வெள்வரகு கொள்ளுட னிறைத்து”(காஞ்சிப். நாடு. 28). இவ்வடிகளை மக்கட்பாடாண்டிணைக்குரியதுறையாகிய மண்ணுமங்கலத்திற்கு உதாரணமாகக் காட்டுவர்;தொல். புறத்திணை. சூ. 36, ந. 3 - 5. புறநா. 16 : 1 - 4. 8 - 10. புறநா. 16 : 6, 23 : 1 - 2. 12. புறநா. 14 : 3. 14. கொண்மார்: முருகு. 173. 15. ‘பிறக்கு என்பது அசைநிலையாகவருமென்பதற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 30. தெய்வச்.;சூ. 31. ந. : இ. வி. சூ. 277, உரை. 18. கண்ணுறை : புறநா. 61 : 5, 140 : 4. 19 - 20. புறநா. 166 : 22 - 3. 1 - 21. “ ‘கடுந்தேர்......எயில்’என எயிலழித்தவாறு கூறி, ‘வீயாச்சிறப்பின்.......நாட்டி’எனவே ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க”(தொல். புறத்திணை. சூ. 36, ந.) 22. “காழி லாவறு பத்துநான் கெனுங்கலையானும், வாழி வென்று வென் றலைகடல் வரைப்பெலாநாட்டும், கேழில் வாகைய மதலையுங் கிளர்மறை முறையான்,வேழ்வி யாற்றிய யூபமும் விறந்தன வனேகம்” (காஞ்சிப்.நகரேற்றுப். 183) 15 - 22. சிறப்பினான் அஃறிணைமுடிபேற்றதற்குமேற்கோள;் நன். மயிலை. சூ. 377; நன். வி. சூ.378; இ. வி. சூ. 298, உரை. 24. புறநா. 33 : 10. (15)
1. இப்பாட்டின் 20 - 21 - ஆம் அடிகளால்தலைவனுடைய பெயர்க் காரணம் புலப்படுகின்றது.
|