(கு - ரை.) 1. ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்து நின்ற சொற்பொருளையே உணர்த்திநிற்றற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 32, ந. 2. புறநா. 146 : 3, 147 : 2. 1-2. மாலைக்காலத்திற் செவ்வழி பண்ணல் : புறநா.149 : 2 - 4. 3. புறநா.145 : 13. னகரவீற்றுச்சொல் வேற்றுமைக்கண் அம்முப்பெற்று நிற்றற்கும் (தொல். குற்றியலுகரப். சூ. 78, ந.) செயவெனெச்சம் முற்றாய்த் திரிவுழி ஆகவென்னும் இடைச்சொல் வந்து அதன் பொருளையே உணர்த்திச் செயவெனெச்சமாய் நிற்றற்கும் (தொல். இடை. சூ. 32, ந.) மேற்கோள். 4. "கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை ....... மதருண்கண்" (பரி. 8 : 74 - 5) 6. செயவெனெச்சம் முற்றாய்த்திரிவுழி ஆகவென்னும் இடைச்சொல் வந்து அதன்பொருளையே உணர்த்திச் செயவெனெச்சமாய் நிற்றற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 32, ந. 8-9. "செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்" (சிறுபாண். 167) 14. முல்லை வேலி : "வேலி சுற்றிய வால்வீ முல்லை" (அகநா. 314 : 19); "முல்லை தலையணிந்த முஞ்ஞை வேலி "(பெருங். 4. 2 : 63) மு. 'அருளா யாகலோ ...... நல்லூரானே: இது கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு; கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென வினவ, யாம் கிளையல்லேம், முல்லைவேலி நல்லூர்க்கண்ணே வருமென்று சொல்லுவரெனக் கூறுதலின், அஃது ஏனைக்கைக்கிளைகளின் வேறாயிற்று' (தொல். புறத்திணை. சூ. 35, ந.) (144)
1 ‘பூப்போலும் மையுண் கண்கள் தாரையாகச் சொரியாது தனித்து வீழ்கின்ற முத்துப்போலுந் துளியைத் துளிப்ப' (முல்லைப். 23, ந.)
|