352
தேஎங்கொண்ட வெண்மண்டையான்
வீ........................................................கறக்குந்து
அவல்வகுத்த பசுங்குடையாற்
புதன்முல்லைப் பூப்பறிக்குந்து
5ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
குன்றேறிப் புனற்பாயிற்
புறவாயாற் புனல்வள................................
.....................................நொடைநறவின்
மாவண் டித்தன் வெண்ணெல் வேலி
10உறந்தை யன்ன வுரைசா னன்கலம்
கொடுப்பவுங் கொளாஅ னெ........
..........................ர்தந்த நாகிள வேங்கையிற்
கதிர்த்தொளி திகழு நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலைய டன்னையும்
15சிறுகோ லுளையும் புரவிெ............
..............................................யமரே.

திணையும் துறையும் அவை.

பரணர்.


(கு - ரை.) 1. தேம் - கள்.

3. அவல் - பள்ளம். குடை - பனமட்டையாற் செய்யப்பட்ட ஒரு கருவி; பனம்பட்டையெனத்தென்னாட்டில் வழங்கும்; "மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை, இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து" (குறுந். 168 : 1 - 2); கலித். 23 : 9.

4. புதற்றளவின் பூ : புறநா. 395 : 6.

5. மு. புறநா. 63 : 12. வள்ளி - வளை.

6. குன்று - மணற்குன்று; எக்கர்.

8, நொடை - விலை.

10, கலம் - ஆபரணம்.

9 - 10. தித்தன் : ஒரு சோழன். உறந்தை - உறையூர்; புறநா. 395 : 18 - 9; "நொச்சி வேலித் தித்த னுறந்தை" (அகநா. 122 : 21)

12 - 3. சுணங்கிற்கு வேங்கைப்பூ உவமை : "நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக், களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற்" (சிறுபாண். 23 - 4); "வேங்கை வென்ற சுணங்கின்" (ஐங்குறு. 324); "வேங்கை, ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள, ஆகத் தரும்பிய மாசறு சுணங்கின்", "பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய, நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலை" (அகநா. 174 : 10 - 12, 319 : 8 - 9); "வேங்கைவீ, முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம்" (கலித். 64 : 26 - 7)

14. மா - கருமை. தன்னை - தமையன்.

(352)