(கு - ரை.) 1. மு.புறநா.370 : 20. இரும்பு - தந்தப்பூண்; கோளகை : ஆகுபெயர். 2. கருங்கை - பெரியகை; கருமை : பெருமை ; "பெருங்கையானை" (புறநா. 3 : 11). கொண்மூ - மேகம். 3. நீண்மொழி - சபதம். மறவர் - வீரர். 4. வாளாயுதம் மின்னலாக. கடிப்பு - குறுந்தடி. 5. குருதிப் பலிய முரசு - இரத்தமாகிய பலியையுடைய வீரமுரசு; "குருதி வேட்கை யுருகெழு முரசம்" (புறநா.50 : 5, குறிப்புரை) 2-5. "உருமிசை முரச முழக்கென விசைப்பச், செருநவில் வேழங் கொண்மூ வாக" (புறநா.373 : 1 - 2) 6. அரசு அரா - பகையரசர்களாகிய பாம்புகள். 7. குதிரை காற்றாக; "காலியற் புரவி" (புறநா.178 : 2) 8. வல்வில் : புறநா.152 : 6, குறிப்புரை. 9. கணைத்துளி - அம்பாகிய மழைத்துளி. 1 - 9. "பெரும்படைச் செற்றத் திருங்கடன் மாந்திக், குஞ்சரக் கொண்மூக் குன்றடைந்து குழீஇக், காலிய லிவுளிக் கடுவளி யாட்ட, வேலிடை மிடைந்து வாளிடை மின்னக், கணைத்துளி பொழிந்த கார்வரைச் சாரல்" (பெருங். 3. 27 : 117 - 21) 10. ஈரச்செறுவயின் - ஈரத்தையுடைய போர்க்களமாகிய வயலின் கண்; பு. வெ. 159. 9 - 10. கிடக்கையாகிய வயலில். 12. படை மிளிர்த்த - ஆயுதமாகிய படைவாளால் கீழ்மேலாக மறிக்கப்பட்ட; "படைமிளிர்ந்திட்ட" (புறநா. 42 : 14) "உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி" (பெரும்பாண்.92) ; படை : சிலேடை. சால் - படைச்சாலில். 13. கணையம் - கணையமரமென்னும் ஆயுதம். கணையமொடு வேலைவித்தி. 14. கூழ் - பயிர். 15. போர்பு : சிலேடை. 16. கழுகு - பேயில் ஒருசாதி; "கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப" (மதுரைக்.633) 17. பாடுநர்க்கு - பாடிவருபவர்களுக்கு ஈதற்பொருட்டு. 18. தேய்வை வெண்காழ் - சந்தனக்கட்டை. விசி பிணி - விசித்த வார்க்கட்டு. 20. வேய்வை - குற்றம். "வேய்வை போகிய விரலுளர் நரம்பு" (பொருந. 17). விருந்து - புதுமை. 19 - 20. "விசிப்புறுத் தமைத்த புதுக்காழ்ப் போர்வை" (புறநா.399 : 24) 21. அரிக்குரற்றடாரி - அரித்தெழுகின்ற ஓசையையுடைய தடாரிப் பறை; ஒலிநரம்பால் ஓசையையுடைய கிணைப்பறை யென்றுமாம். உருப்ப-சூடு பிறக்க; புறநா.249; 4, குறிப்புரை. "அகன்கட் டடாரி தெளிர்ப்ப வொற்றி", "அரிக்குரற் றடாரி யிரிய வொற்றி" (புறநா.370 : 18, 390 : 7) 22. வந்திசின் : வந்தேன்; "காண்கு வந்திசிற் பெரும", "நிற்காண்கு வந்திசினே", "மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும" (புறநா. 17 : 33, 125 : 4, 373 : 34) பாடு ஆன்று - ஓசை நிறைந்து. 23 - 3. "பாடான் றிரங்கு மருவி" (புறநா. 124 : 4) 24. "பொற்கோட் டிமயம்" (புறநா.2 : 24, 39 : 14 - 5) 26. துடியடிக் குழவிய பிடி - உடுக்கையின் கண்போன்ற அடியையுடைய கன்றை நீங்காத பெண்யானை; "துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரை" (கலித்.11 : 8) 27. முகவை - ஏற்றுக்கொள்ளும் பரிசில். 26 - 7. "மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு, கறையடி யானையிரியல் போக்கும்......ஆஅய்", "வரைமருண் முகவைக்கு வந்தனென்", "புகர்முக முகவைக்கு வந்திசின்" (புறநா. 135 : 11 - 3, 370 : 21, 371 : 20); "துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு, பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென" (பொருந. 125 - 6); "இருபெயர்ப் பேராயமொ, டிலங்குமருப்பிற் களிறுகொடுத்தும்" (மதுரைக். 101 - 2); ‘கன்றும் பிடியுமென்னும் இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடனே விளங்குகின்ற கொம்பினையுடைய களிறுகளைக் கொடுத்தும்’ (மதுரைக். 101 - 2, ந.) மு. தொல். புறத்திணை. சூ. 17, இளம்; சூ. 21, ந.; உவம. சூ. 9, இளம். மேற். (369)
|