(கு - ரை.) 1 - 2 நேரசை கூனாய்நின்றதற்குஇவ்வடிகள் மேற்கோள்; தொல். செய். சூ. 48; பேர்.;49, ந. 3. களத்தைத் தமதாக்கிக் கொள்ளுதல்: புறநா. 53 : 5. கு - ரை. “வென்று களங்கொண்ட வேல்வேந்தே”(பு - வெ. 225) என்பதனாலும், “தேன்மிடைந்த தாரினான்செங்களஞ் சிறந்ததே” (சீவக. 279) என்பதற்குஎழுதப்பட்ட ‘இத்துணையும் இவன் வெற்றியாதலின்இவன் களமென்றார்’ என்னும் குறிப்புரையாலும்விளங்கும். “பறைதாள் விளவு” (பெரும்பாண்.95). இவ்வடி பதினோரெழுத் திருசீரடி வஞ்சிப்பாவிற்குமேற்கோள்; யா - வி. ஒழிபியல், சூ. 95. 5. துவையென்னும் உரிச்சொல் ஓசைப்பொருளில்வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ.458; நன். வி. சூ. 459. 5 - 6. குறளடியும் சிந்தடியும் வந்தமையான்மயக்கடி வஞ்சிப் பாட்டானதற்கு மேற்கோள்; தொல்.செய். சூ. 47. ந. 6. “கம்பமொடு துளங்கிய விலக்கம்”(புறநா. 260 : 23) 9. ‘எருத்துவ்விய’ எனப்பாடங்கொண்டுஎரு, இறைச்சியெனப் பொருள்கூறுவர் தக்க. உரையாசிரியர்(386) 10 - 11. கடிமதிற் கதவம் பாய்தலிற்றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண்கோட்டுச்,சிறுகண்யானை” (அகநா. 24 : 11 - 3) 10 - 12. களிறு....போன்றன; நிரைபசைவஞ்சியடியிற் கூனாய் வந்ததற்கு மேற்கோள்; தொல்.செய். சூ. 48, பேர்.; ந. 13. புறநா. 2 - 13. 15 - 6. “பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங், கோவறவிமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”(முருகு. 2 - 3) ; தொல். கிளவி. சூ. 18 : தெய்வச்.;கல். மேற்.; புறநா. 228 : 8 - 9; பு - வெ. 201) ; சீவக.2371. 13 - 6. வாழ்த்து வகையில் தேரடுத்துவந்ததற்கு இதுமேற்கோள்; தொல். புறத்திணை. சூ.31. ந. 17. மு. புறநா. 20 : 20; பதிற்.80 : 12. மாறு, மூன்றாம்வேற்றுமைப்பொருட்கண் வருமென்பதற்கும்(தொல். இடை. சூ. 2, சே.; இ - வி. சூ. 251, உரை), காரணப்பொருளுணர்த்திநிற்குமென்பதற்கும் (தொல். இடை. சூ. 2, ந.),ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்து நின்றசொற்பொருளையே உணர்த்தி நிற்குமென்பதற்கும்முச்சீரடி இடை வந்ததற்கும் (தொல். இடை. சூ. 32,ந.; தொல். செய். சூ. 71, பேர்.) இது மேற்கோள். 18 - 9. “ஈன்றோ ணீத்த குழவிபோல”, தாயி, றூவாக் குழவி போல” (புறநா.230 : 7, 379 : 14 - 5); “குழவிகொள் வாரிற் குடிபுறந்தந்து”(பதிற். 6 - ஆம்பத்துப் பதிகம்); “தாயிலாக்குழவி போலச் சாதுய ரெய்துகின்றேன்; (சீவக.1581) ; ‘தாயி றூவாக் குழவித்துயர்” “தாயொழிகுழவி போலக் கூஉம்” (மணி. 13 : 11, 25 : 111); “ஓங்குகுடை நீழ லுலகுதுயின் மடியக்,குழவிகொள் பவரி னிகழா தோம்பி” (பெருங்.4. 10 : 133 - 4) 15 - 9. வஞ்சிப்பா மண்டில ஆசிரியத்தான்இற்றதற்கு மேற்கோள்; தொல். செய். சூ., 71, பேர். இதன் 14 - ஆம் அடியாற் பாட்டுடைத்தலைவனதுபெயர்க்காரணம் புலப்படுகின்றது. (4)
1. அருப்புத்தொழில் : கலித்.104 : 23, ந. 2. ‘இடவாய்வலவாயாகிய இடம்’(கலித். 140 : 14, ந.) 3. உவற்றி - ஊற்றி; “ஒண்செங்குருதியுவற்றியுண்டருந்துபு,புலவுப்பலி துறந்த கலவுக்கழி கடுமுடை” (அகநா.3) 4. ஒத்துதல் - அழுத்தல்; “ஒத்துந்தாளத் தொக்கத் தத்தித், தத்தும் பரிதன்றான் வைத்ததுவே”(திருவால. 28 : 53)
|