(கு - ரை.) 2. குறள், 395, பரிமேல்.உரைநடை. 5 - 6. “ஒருகுடியிற், கல்லாது மூத்தானைக்கைவிடுபு கற்றா, னிளமைபா ராட்டு முலகு” (நான்மணி.65) 7. “அறிவுடை யொருவனை யரசனும்விரும்பும்” (வெற்றி வேற்கை) 8 - 10. “தோணி யியக்குவான் றொல்லைவருணத்துக், காணிற் கடைப்பட்டா னென்றிகழார் -காணா, யவன்றுணையா வாறுபோ யற்றே நூல் கற்ற, மகன்றுணையாநல்ல கொளல்” (நாலடி. 136) ‘வேற்றுமை....படுமே : இது வேதமொழிந்தகல்வியோதல் கூறிற்று” (தொல். புறத்திணை.சூ. 16, இளம்.) மு. “சிறப்பின் பாலார் மக்களல்லார், மறப்பின் பாலார் மன்னர்க்கு” (மணி.23 : 31 - 2) ‘உற்றுழி....படுமே : இது வேளாளர்ஓதலின் சிறப்புக் கூறியது’ (தொல்.புறத்திணை. சூ. 20, ந.) (183)
|