(குறிப்புரை) 1. கண்ணி - ஆடவர் தலையிற்சூடுதற்குரிய மாலை; “பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்”(முருகு. 44); கார் நறுங் கொன்றை: “காரினார் மலர்க்கொன்றைதாங்கு கடவுள்”, “கார்க் கொன்றை மாலை கலந்ததுண்டோ” (தே.) ; கொன்றைமாலை சிவபெருமானதுஅடையாள மாலை என்பர்; கலித். 150 : 1.; சீவக. 208, ந. 2. தார் - மார்பிலணியுமாலை; “மார்பொடு விளங்கவொருகை, தாரொடு பொலிய வொருகை” (முருகு. 112 - 3);“பொலந்தார் மார்பினெடியோன்” (மதுரைக்.61); “புனைதார்ப் பொலிந்த வண்டுபடுமார்பின்”(மலைபடு. 56) 1 - 2. “கார்விரி, கொன்றைப்பொன்னேர் புதுமலர்த், தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்”(அகநா. கடவுள்.) 3. “ஒன்றானுங் குறைவில்லை யூர்திவெள்ளேறு”(தே.); “வால் வெண் சுண்ணம்” (மணி. 4 : 18); “வால்வெண்டோடு - இளைய வெள்ளிய தோடெனினுமமையும்; ‘ஊர்திவால்வெள்ளேறே‘(சிலப். 16 : 35, அடியார்.) என்றாராகலின்” 1 - 3. “கண்ணி.....ஏறே யென்புழிக் கொன்றையையும்ஏற்றையும் இடைவந்த சொற்கள் விசேடித்து வந்தன”(தொல். எச்ச. சூ. 59, ந.) 3 - 4. புறநா. 56 : 1 - 2. 5. “இயங்கலு மியங்கு மயங்கலுமயங்கும்” (சிலப். 22 : 154); “சுழலலுஞ் சுழலுமோடலு மோடும்........நீடலு நீடும்”, “தமபெரும்பற்று நீங்கலு நீங்கார்” (மணி. 3 : 111 - 3, 8 : 57);“முரிமுரிந்தவென்பதனை, ‘அணியலு மணிந்தன்று’என்றாற்போலக் கொள்க” (சீவக. 2310, ந.); “கறைமிடறணியலு மணிந்தன்றென்புழிக் கறைமிடற்றை அழகு பெறுதலையுஞ்செய்ததென.........முழுதும் காரியவாசகமாயே நின்றவாறுகாண்க” (தொல். வேற்றுமைமயங்கு. சூ. 29, ந.); வேற்றுமைக்கண்றகரம் மிகாமைக்கு இவ்வடி மேற்கோள் (நன். மயிலை.சூ. 182; நன். வி. சூ. 183; இ - வி. சூ. 102, உரை); “விடமும்வந் தீசன் கோல மிடற்றினினீல வண்ண, வடிவுபெற்றணிய தாகி வயங்கிற்றுப் பெரிது மென்றால்,கொடியரும் பெருமை யோரைக் கூடின்வெங் கோது நீங்கி,ஒடிவறு நலம்பெற் றுய்த லுரைப்பதெ னுலகி னம்மா”(பாகவதம், 8 : கடல்கடைந்த. 24); “அணியலுமணிந்தன்று;ஒரு பொருட் பன்மொழி” (நன். மயிலை. சூ. 397); கறைமறுவெனப்படுதல்: “விண்ணினார் புகழ்தற் கொத்தவிழுமியோ னெற்றி போழ்ந்த, கண்ணினான் கண்டந்தன்மேற் கறையையார் கறையன் றென்பார்” (குண்டல.);“பாவகத்தைப் பாவித்தலென்பது, ‘கறைமிட றணியலுமணிந்தன்று‘ என்றது போலக் கொள்க” (சிவஞானபோதம்,பொதுவியல்பு, சூ. 6, மேற்.); கறை அழகு செய்யு மென்பதை,“கடுக்கவின்பெறு கண்டனும்” (திருவிளை. நகரப்.)என்பதனால் உணர்க. 6. நவிலல் - கூறியடிப்படல்; “நாவிடைநன்னூ னன்கன நவிற்றி” (மணி. 13 : 24) 9. (புறநா. 55 : 4 - 5); “பிறைநெற்றியோடுற்ற முக்கண்ணினார்”, “பிறை தாங்கு நெற்றியர்”,“பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந் தவனே” (தே.) 7 - 9. ஆகின்று - ஆயிற்று; புறநா. 148 :7. 10. பதினெண்கணன் : “ஒன்பதிற்றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்” (முருகு. 168) 9 - 10. பிறை தொழுதேத்தப்படுதல்:“தொழுதுகாண் பிறையிற்றோன்றி” (குறுந். 178);“ஒள்ளிழை மகளி ருயர்பிறை தொழூஉம், புல்லென்மாலை” (அகநா. 239); “குழவித் திங்க ளிமையவ ரேத்த,அழகொடு முடித்த வருமைத்து” (சிலப். 2 : 38 - 9); “அப்பிறை,பதினெண் கணனு மேத்தவும் படுமே யென்றார் புறப்பாட்டினும்”(சிலப். 2 : 38 - 9, அடியார்.); வி. பா. குருகுலச். 6. 11 - 2. ஆசிரியப்பாவில் ஈற்றயலடிமுச்சீர்த்தாய் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல்.செய். சூ. 68, பேர். 13. அருந்தவத்தோன் : “அருந்தவமுதல்வன்” (கலித். 100 : 7); “நற்றவனைப் புற்றரவநாணி னானை”, “நற்றவனை நான்மறைகளாயி னானை”,“நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே”,“நற்றவன் காண்”, “மாதொர் கூறுடை நற்றவனை”(தே.); “அருந்தவ னதிசயித்து” (திருவால. 61 : 6).
1. ‘ஏமமாகிய நீர்’ என்றது “நீரின்றமையாதுலகு”(குறள், 20) என்பது கருதி. 2. முருகு. 168, ந.; பிங்கலம், 92; தக்க.136, உரை.
|