282
எஃகுளங் கழிய விருநில மருங்கின்
அருங்கட னிறுத்த பெருஞ்செ யாளனை
யாண்டுள னோவென வினவுதி யாயிற்
.........................................................
வருபடை தாங்கிய கிளர்தா ரகலம்
5அருங்கட னிறுமார் வயவ ரெறிய
உடம்புந் தோன்றா வுயிர்கெட் டன்றே
மலையுநர் மடங்கி மாறெதிர் கழியத்
........................................................
அலகை போகிச் சிதைந்துவே றாகிய
பலகை யல்லது களத்தொழி யாதே
10சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர் வாயு ளானே.

(பி - ம்.) 5 ‘வாய ரெறிய’ ‘கழறிய’8 ‘போற்கச்’

திணை...............................
பாலைபாடிய பெருங்கடுங்கோ.


(கு - ரை.) 1. எஃகு - வேல்.

2. பெருஞ்செயாளனை - பெரிய செய்கையை ஆளும் வீரனை;“பெருஞ்செ யாடவர்” (புறநா. 199 : 5)

3. புறநா. 86 : 2.

5. இறுமார் - முடித்தற்கு.

4 - 5. அகலம் - மார்பு. அகலத்தை எறிய.

6. படைக்கலங்களுக்குட் கிடக்கின்றமையின், உடம்புதோன்றாதாயிற்று. கெட்டன்று - கெட்டது; நீங்கிற்று.

7. மடங்கி - மீண்டு. 9. பலகை - கேடகம்.

10. சேண் - நெடுந்தூரம்; “சேண்விளங்கும் புகழ்” (புறநா.10 : 11); “சேண்விளங்கு நல்லிசை” (அகநா. 205 : 8)

11. நவிலுதல் - கூறிப்பழகுதல்; “மறை நவி லந்தணர்”(புறநா. 1 : 6) : “நவிறொறு நூனயம் போலும்” (குறள்,783)

10 - 11. துறக்கத்தில் விளங்குதற்குக் காரணமாகிய நல்லபுகழென்றுமாம்; புறநா. 27 : 7 - 9, குறிப்புரை.

(282)