357
குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண்
பொதுமை சுட்டிய மூவ ருலகமும்
பொதுமை யின்றி யாண்டிசி னோர்க்கும்
ஆண்ட வன்றே யாண்டுக டுணையே
5வைத்த தன்றே வெறுக்கை வி.........
............................................................ணை
புணைகை விட்டோர்க் கரிதே துணையழத்
தொக்குயிர் வௌவுங் காலை
இக்கரை நின்றிவர்ந் துக்கரை கொளலே.

(பி - ம்.) 9 ‘கொளவே’

திணை - அது; துறை.......... பெருங்காஞ்சியுமாம்.

பிரமனார்.


(கு - ரை.) 1. குன்று-சிறுமலை. பிணித்து யாத்த - மிக உறுதியாக யாக்கப் பெற்ற.

2. சுட்டிய - நன்கு மதிக்கப்பெற்ற. மூவருலகம் - சேரசோழ பாண்டியருடைய நாடுகள் ; ‘உலகம்’ என்பது பூமியின் ஏகதேசத்திற்கும் வழங்கும்; "மாயோன் மேய காடுறை யுலகமும்" (தொல்.அகத்திணை. சூ. 5)

3. பொதுமையின்றி - சிறப்பாக. ஆண்டிசினோர்க்கும் - ஆண்டோர்க்கும்.

4 - 5. ஆண்டுகள் - வாழ்நாட்கள். வெறுக்கை துணை வைத்த தன்றே - பொற்குவியல் துணையாக வைக்கப் பெற்றதன்று; அழியுந் தன்மைய தென்றபடி.

7. புணை - தெப்பம். துணை - மனைவி.

8. கூற்றுவன்தமர் வந்து கூடி உயிரை வௌவுங்காலத்தில்.

9. உக்கரை - அக்கரை; வீட்டுலகம்.கொளல் (9) அரிது (7)

(357)