(கு - ரை.) 1. ஓரை - மகளிர்விளையாட்டு; “விளையா டாயமொ டோரை யாடாது”(நற். 68); “ஓரை யாயங் கூற’‘, “ஓரை மகளிர்”(குறுந். 48, 316, 401) 3. ஆமைமுட்டை: “நிறைச்சூலியாமை மறைத்தீன்று புதைத்த, கோட்டுவட் டுருவின்புலவுநாறு முட்டை” (அகநா. 160) 5. “புனலம் புதவின் மிழலை” (புறநா.24 : 19). புதவு - கதவு; ஆகுபெயர். 6. “நெல்லமல் புரவி னிலங்கைகிழவோன்” (புறநா. 379 : 6) 7. “இல்லோர் செம்மல்” (சிலப்.15 : 90); “அறிந்தோர் சொன்மலை” (முருகு. 263) 6 - 7. “நன்மா விலங்கை மன்னருள்ளும்...பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை, நல்லியக்கோடனை”, “செல்லிசை நிலைஇய பண்பி னல்லியக்கோடனை” (சிறுபாண். 120 - 26, 268 - 9) 8. “நல்லைமன் றம்ம பாலே” (குறுந்.229) 9. மு. புறநா. 337 : 6. 9 - 10. “இனியே, பாரி பறம்பிற்பனிச்சுனைத் தெண்ணீர், தைஇத் திங்கட் டண்ணியதரினும், வெய்ய வுவர்க்கு மென்றனிர்” (குறுந்.196) 11 - 2. செய்யாவென்னும்வாய்பாட்டுவினையெச்சம் வினைமுதலும் இறந்தகாலமும்தழுவிவந்ததற்கு மேற்கோள்; (நன். சூ. 343, மயிலை.) 13. சாயல் ஆண்பாலார்க்கும் கூறப்படுதல்,“நீரினு மினிய சாயற், பாரிவேள்” (புறநா.105) என்பதனாலும் அதன் குறிப்பாலும் உணரலாகும். (176)
1 இவன், பத்துப்பாட்டிலுள்ள சிறுபாணாற்றுப்படைத்தலைவன். 2 புறநா. 65 : 12. 3 “இன்றே போல்கநும்புணர்ச்சி” (புறநா. 58 : 28)
|