277
மீனுண் கொக்கின் றூவி யன்ன
வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்னு முவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
5நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

(பி - ம்.) 1 ‘வெண்சிறகன்ன’5 ‘கோன்கழையலமரும்’ 5 - 6 ‘வெதிரத்துச்சிமையத்து’,‘வெதிர்......வானலியற் றூங்கிய’ 6 ‘வான்பெயற்றூங்கிய’

திணை - அது; துறை - உவகைக்கலுழ்ச்சி.

பூங்கணுத்திரையார் (பி - ம். பூங்கண்ணுத்திரை)


(கு - ரை.) 1 - 2. “குயிலொத்திருள்குஞ்சி கொக்கொத் திருமல், பயிலப் புகாமுன்னநெஞ்சே” (11-ஆம் திருமுறை, க்ஷேத்திரத்.12)

3. புறநா. 279: 4.

3 - 4. புறநா. 278: 9, 265: 5 - 7; “ஈன்றபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச், சான்றோனெனக்கேட்ட தாய்” (குறள், 69); “மற்றவன்சொன்னவாசகங் கேட்டலு மகனைப், பெற்ற வன்றினும் பிஞ்ஞகன்பிடித்தவப் பெருவில், இற்ற வன்றினு மெறிமழு வாளவனிழுக்கம், உற்ற வன்றினும் பெரியதோ ருவகையனானான்” (கம்ப. அயோத்தி. மந்திர. 42)

5. வலியமூங்கில் அசைகின்ற வெதிரத்தில்;வெதிரம்: ஒருமலை.

6. மேகம் மழைபொழிய வீழ்ந்ததுளிகளிலும் பலவாகும்.

மு. காஞ்சித்திணைத் துறைகளுள்,‘பேரிசை, மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற,மாய்ந்த பூசன் மயக்கம்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 19, இளம்; சூ. 24, ந.

(277)