84
அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
அடுதோண் முயங்க லவைநா ணுவலே
என்போற் பெருவிதுப் புறுக வென்றும்
5ஒருபாற் படாஅ தாகி
இருபாற் பட்டவிம் மைய லூரே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) என்னுடைய தலைவன், தன்நாடிழந்த வறுமையாற்புற்கை நுகர்ந்தானாயினும்பகைவர் அஞ்சத்தக்க பெரியதோளையுடையன்; யாம்,அவனுடைய சிறைப்புறத்திருந்தும் பலகாலுங் காணப்பெறினும்மெய்யுறப்பெறாமையின் வருந்திப் 1 பொன்போலும்நிறத்தையுடையேமாயினேம்; போரையேற்று என் தலைவன்போர்க்களத்தின்கட் புகிற் கல்லென்னும் ஒலியையுடையபெரிய ஊரின்கட் 2 போர்செய்தற்கெடுத்த விழாவினையுடைய இடத்துத் தோள்வலி பேசி இன்பமுற்றுப்போந்த வீரர்க்கு உப்புவிற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடையதுறையை ஒப்பன்-எ - று.

என்னை, புற்கையுண்டும் பகைவெல்லும்பெருந்தோளனாம்; யாம், அவன் சிறைப்புறத்திருந்தும்பசப்பை வெல்லமாட்டாமையால் பொன் போன்றனமெனத்தன் வேட்கைமிகுதி கூறியவாறு.

அன்றி, இதற்கு என்னைபுற்கையுண்டும் வழங்கும் பெரியதோளை யுடையனாயும்நம்மிடத்து அருளின்மையின், அவன் சிறைப்புறத்திருந்தும்பொன்போற் பசந்தேமென்று அழிந்து கூறியதாகப் பொருளுரைப்பாரும்உளர்.

உமணர் வெரூஉம் துறையன்னனென்றதனாற்பயன்: வருத்துங் கூற்றின் ஆடவரையும் மகளிரையும் ஒக்கவருத்துவதல்லதுஅருளுமாறு கற்றிலனோவென்னும் நினைவிற்றாக்குக.


(கு - ரை.) 1. என்னை : புறநா.78 : 2, குறிப்புரை.

2. தம்மைப் போன்ற மகளிரையு முளப்படுத்தி,‘யாமே’ என்றார். புறஞ்சிறை - சிறைப்புறம்.

புறநா. 102 : 1 - 5.

மு. பெண்பாற் கைக்கிளைக்கும் (தொல்.செய். சூ. 160, பேர்.), சுட்டியொருவர்ப் பெயர்கொள்ளாதபாடாண்டிணைக் கைக்கிளைக்கும் (தொல். செய்.சூ. 160, ந.) மேற்கோள்.

(84)


1 பொன்போலும் நிறமென்றது பசலைநிறத்தை; இது தலைவர் பிரிவினால் மகளிர்க்கு உண்டாவது.

2 “விழவுமேம்பட்ட நற்போர்”(புறநா. 88 : 5)