(கு - ரை.) 4-5. சினைப்பொருட்கண் வந்த வினையெச்சம் காரணகாரியப் பொருட்டாய் வினைமுதலோடு முடிந்ததற்கு மேற்கோள்; தொல். வினை. சூ. 34, ந.; இ. வி.சூ. 248, உரை. 6. "பசந்த மேனியள் படர்நோ யுற்று" (சிலப்.13 : 68) படரென்னுமுரிச்சொல், உள்ளுதல் செல்லுதலென்னுங் குறிப்புக்களை உணர்த்து மென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 42, ந. 7. குறுமாக்கள்: புறநா.94 : 1, குறிப்புரை; கலித்.82 : 9. 7 - 8. புறநா.160 : 18 - 9. 6 - 12. " வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த, குப்பை வேளை யுப்பிலி வெந்ததை, மடவோர் காட்சி நாணிக் கடையடைத், திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு, மழிபசி" (சிறுபாண்.136 - 40) 14. என்வெய்யோளென்றது மனைவியை. 6 - 14. "பசந்த...........வெய்ளோளுமெனச் செய்தெனெச்சத்திடையே அவ்வினையெச்சமுற்றும் அதன்குறிப்பெச்சமும் உடனடுக்கி முடிந்தனவும் பிறவும் ‘பன்முறையானும்' என்றதனாற் கொள்க" (தொல். வினை. சூ. 36, ந.)
1 "மின்னு முழக்கு மிடியு மற்றின்ன" (ஐந்திணையைம்பது,3) 2 "மறம்வீங்கு பல்புகழ்" (பதிற். 12 : 8) என்பதனுரையைப் பார்க்க. 15. இருவரென்றது - தாயையும் மனைவியையும்; மிக்க மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயனபலவும் செய்தாயினும் புறந்தருக வென்பது அறநூற்பொதுவிதி யாதலின் ‘இருவர் நெஞ்சமுமுவப்ப' என்றார்; குறள், 656, பரிமேல்.17 - 8. கலித். 43 : 4. 19. "கருவி வானந் துளிசொரிந் தாங்கு" (பெரும்பாண்.24); "கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென" (சீவக.2752) 18 - 20. புறநா.160 : 1 - 10.21. புறநா.160 : 4. 28. புறநா.158 : 27. (159)
|