(கு - ரை.) 1. உருவென்னும் உரிச்சொல் உட்கென்னும் பொருளில் வருவதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 4, ந.; இ. வி.சூ. 290, உரை. 4. புறநா. 159 : 21. 2-4. "பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக், கருவி வானந் துளிசொரிந் தாங்குப், பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கல்" (பெரும்பாண். 23 - 5) 1-4. புறநா.174 : 23 - 8. 5. அவிழ் - பருக்கை. 7. நெய்யுடை யடிசில்: புறநா.188 : 5. 8-9. பெரும்பாண்.477; "திங்கணலஞ் சூழ்ந்ததிரு மீன்களெனச் செம்பொற், பொங்குகதிர் மின்னுபுகழ்க் கலங்கள்பல பரப்பி" (சீவக.2025) 15. பல்புகழ் - கல்வி, ஆண்மை கொடை முதலியவற்றால் உளவாய புகழ்; மறம்வீங்கு பல்புகழ்" (பதிற்.12 : 8) என்பதனுரையையும், 231-ஆம் குறளின் பரிமேலழகருரையையும் பார்க்க. 16. "ஊக்கந் துரப்ப" (புறநா.8 : 3) 14-6. புறநா.161 : 21. 18. உளைமயிர் - குதிரையின் தலையாட்டத்திலுள்ள மயிர். "புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து" (அகநா.176; 19). பன்மாண் பலகால்; புறநா.365 : 9; கலித். 47 : 8. 18 - 9. புறநா.159 : 7 - 8, 164 : 3 - 5, 211 : 20 - 21. 21 - 2. "அழுகை மகளிர்க் குழுவை செப்ப" (பரி.14 : 12) உரையைப் பார்க்க. 30. ஏத்துகம் பல: புறநா.10 : 13. 29-30. புறநா.166 : 23; "மண்டேய்த்த புகழினான்" (சிலப். 1 : 36) (160)
1கலித். 80 : 19.
|