(கு - ரை.) 1. "கடல்குறை படுத்தநீர் கல்குறை படவெறிந்து" (பரி.20 : 1); "தடிந்தெழிலி, தானல்கா தாகி விடின்" (குறள், 17) 4. புறநா.174 : 28; "உருமுரறு கருவிய பெருமழை" (அகநா. 158 : 1); "உருமுரறு கருவிய பெருமலை பிற்பட" (மலைபடு.357) 5. என்றூழ் - வெயில். 4 - 5. புறநா.203 : 1. 9-10. புறநா.136 : 10 - 14; "அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாம், கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர், துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற், புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை" (கலித்.4 : 3 - 6) 11. தெவிட்டல்: "புரவி புல்லுணாத் தெவிட்ட" (மதுரைக்.660); "புரவி புல்லுணாத் தெவிட்டும்" (நெடுநல். 93 : 4) 13. பொறி - ஒளி; "பொறிவரிப் புகர்முகம்" (பெரும்பாண். 448) 14. புறநா.146 : 7. 15. தாள்படு செல்வம்: (புறநா.148 : 2); "தாளாற்றித் தந்த பொருள்" (குறள்,212) 14-5. கலித்.35 : 1. 16. புறநா.340 : 7; "பனைக்கை மும்மத வேழ முரித்தவன்" (தே.) 17. புறநா. 38, 42, 125, 140, 197, 238, 387; மலைபடு. 572. 16-7. யானைக்கொம்புமுத்தம்: புறநா.170 : 10 ; 11. 19. புறநா.3 : 10, 72 : 3, 165 : 6, 351 ; 1. 23. வல்லினும் - வல்லேனாயினும்; "உணர்த்த வல்லின்" (தொல்.உரி. சூ. 94); வல்லோன் - வன்மையில்லேன்; "பரிசின் மாக்கள் வல்லாராயினும்" (பதிற்.20 : 22) ; புறநா.57 : 1 - 3, குறிப்புரை பார்க்க. 24-5. "சிரப்பான் மணிமவுலிச் சேரமான் றன்னைச், சுரப்பாடியான் கேட்பப் பொன்னாடொன் றீந்தான், இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்" (ஒளவையார் பாடல்) என்பது இங்கே அறியற்பாலது. 27. பொறி - உத்தம இலக்கணம்; புறநா.68 : 5. குறிப்புரை. 29. நாண்முரசு : ஐங்குறு. 448; மதுரைக்.232; சிலப்.14 : 14, 17:6; பு. வெ.117. 30. தாணிழல் : “வீரன் றாணிழல்”, “அடிநிழற் றருக வென்றெம் மாணைவேந் தருளிச் செய்தான்” (சீவக.409, 1087) 31. புறநா.24 : 29. 32. புறநா.10 : 13, 160 : 30. (161)
1. புறநா. 148 : 2, குறிப்புரையையும், "ஊக்க வேந்த னாக்கம் போல" (பெருங். 3. 5 : 20) என்பதையும் பார்க்க. 2 "இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக், கம்மியரு மூர்வர் களி றோடைநுதல் சூட்டி" (சீவக. 495)
|