(பி - ம்.) 4 ‘அகனகு’ திணையும் துறையும் அவை. வெளிமான் துஞ்சியபின் அவன் தம்பி இளவெளிமானைப் பரிசில் கொடுவென அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது. (இ - ள்.) எழுந்திருப்பாயாக, இனி எம்முடைய நெஞ்சமே! யாம் போவேமாக; யார்தாம், கண்ணாற் பருகுவது போலும் விருப்பமில்லாத விடத்துத் தம்மருகே கண்டுவைத்தும் கண்டறியாதார்போல உள்ள மகிழ வாராத 1தம்முகம் மாறித் தரப்பட்ட பரிசிலைப் பிறிதோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர் விரும்பாரல்லர்? இங்ஙனம் வருவீராக வென்று எதிர்கோடல் வேண்டும் தரமுடையோர்க்கு, பெரிது உலகம்; விரும்புவோரும் பலர்; ஆதலால், மறம்பொருந்திய வலியையுடைய யாளியையொப்ப, உள்ளம் மேற்கோளின்றித் தணியாது, கண்டோர் யாவர்க்கும் தெரியத் தம்மைக் கண்டு இரங்காதவனிடத்தே நின்று திரங்கி உள்ளுறக் கனியாத வலிய பழத்தின் பொருட்டுச் சுழல்வோர்-எ - று. வன்கனியென்றது, நெஞ்சுநெகிழ்ந்து கொடாத பரிசிலை. உலமரலும் அலமரல் போல்வதோர் உரிச்சொல். வாயா வன்கனிக்கு உலமருவோர் யாரோ? நெஞ்சமே? உள்ளம் உள்ளவிந்தடங்காது யாளிபோல இனி எழுவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வரிசையோர்க்கு யாளிபோல உள்ளம் உள்ளவிந்தடங்காதென முற்றாக்கி உரைப்பாரும் உளர். |