(கு - ரை.) 1. கோடுயரடுப்பு : “பல்கோட்டடுப்பிற் பாலுலையிரீஇ” (அகநா. 141 : 15) 1 - 2. “புனிற்றுநாய் குரைக்கும்புல்லெ னட்டில், காழ்சோர் முதுசுவர்க் கணிச்சிதலரித்த, பூழி பூத்த புழற்கா ளாம்பி, ஒல்குபசி யுழந்த....வளைக்கைக்கிணைமகள்” (சிறுபாண். 132 - 6) 3 - 5. புறநா. 211 : 20 - 21. 7. புறநா.159 : 15, குறிப்புரை. 1 - 7. “சாம்பல்கண் டறியாவாம்பி பூத்த, எலிதுயி லடுப்பிற்றலை மடுத் தொதுங்கிச்,சிறுசிறா ரலறப் பெருமனைக் கிழத்தி, குடங்கையிற்றாங்கிய கொடிற்றினள் குடங்கைக், கடங்கா வுண்கணாறலைத் தொழுக, அழுகுரல் செவிசுட விழுமநோய்மிக்குக், களைகண் காணாதலமரு மேல்வையில்’ (காசிக்கலம்.57) 4-8. ‘இல்லிதூர்ந்த....குமண என்புழி,முலைப்பசைகாணாது அழுகின்றது குழவியென்பது தன்கட்டோன்றியவறுமைபற்றி அவலம் பிறந்தது; மகமுகநோக்கி அழுகின்றாள்என் மனைவியென்பது பிறர்கட்டோன்றிய வறுமையவலம்’(தொல். மெய்ப்பாடு. சூ. 5, பேர்.) 10. தொடுத்தும் - வளைத்தும்; புறநா.135 : 17, 156 : 4; “வளைத்துவாங்கு பொன்னிழவாதே யென்றார்”(திருவால. 28 : 2) 11. பண்ணமை : புறநா. 170 : 13. பச்சை- யாழின் தோற்போர்வை; “விளக்கழ லுருவின்விசியுறு பச்சை” (பொருந. 5); “புகழ்வினைப்பொலிந்த பச்சை” (சிறுபாண். 226) 13. புறநா. 3 : 24 - 6. 10 - 13. “கரப்பிலா நெஞ்சிற்கடனறிவார் முன்னின், றிரப்புமோரேஎ ருடைத்து” (குறள்,1053) என்பது இங்கே அறியற்பாலது. மு. வாகைத்திணையின்பகுதியாகிய பரிசில்கடைஇய கடைக்கூட்டு நிலைக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 30, இளம். ‘ஆடுநனி மறந்த....குடிப்பிறந்தோயே: இது பரிசில்கடாநிலை’ (தொல். புறத். சூ. 36,ந.), (164) |