11
அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
10புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
15குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.

திணை - பாடாண்டிணை; துறை - பரிசில்கடாநிலை.

சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவைப்பேய்மகள் இளவெயினி (பி - ம். இளவினி) பாடியது. (11)

(இ - ள்.) ஐய மயிரையுடையதிரண்ட முன்கையினையும் தூய ஆபரணத்தையுமுடையபேதைமகளிர் வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்தபாவைக்கு வளைந்த கோட்டுப்பூவைப் பறித்துக்குளிர்ந்த ஆன் பொருந்தத்து நீரின்கட் பாய்ந்துவிளையாடும் வானைமுட்டிய புகழினையும்வென்றியையுமுடைய கருவூரின்கட் பாடுதற்கமைந்தவெற்றியையுடைய அரசனும், பகைதொறும்வெம்மையையுடைய அரணை அழித்துவலியோடுஎதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்;அப்புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனதுவீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப்பொலிவுடைய சிறந்த பலகழஞ்சாற் செய்யப்பட்டநன்மையையுடைய அணிகலத்தைப் பெற்றாள்;அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்குமுதற்றானமாகிய குரலிலே வந்து பொருந்தும்அளவையுடைய பாட்டைவல்ல பாணனும், விளங்கியதழலின்கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரை யாகியவெள்ளிநாராற் றொடுத்த பூவைப் பெற்றான் - எ - று.

பாடினி இழைபெற்றாள், பாணன்பூப்பெற்றான், யான் அதுபெறு கின்றிலேனெனப்பரிசில்கடாநிலையாயிற்று; இனி, இவள்பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவுகொண்டுபாடினாளொருத்தியெனவும், ‘இக் களத்து வந்தோர்யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடுஎதிர்ந்து பட்டோரில்லாமையான், எனக்கு உணவாகியதசை பெற்றிலேன்‘ எனத் தான் பேய்மகளானமைதோன்றப் பரிசில்கடாயினாளெனவுங் கூறுவாருமுளர்.

‘பாடினிக்கு,.....பாண்மகன்’என்பது, 1 ‘அதுவெனுருபுகெடக் குகரம் வந்தது;உயர்திணையாகலின். 2பாடினிபாடலுக்கேற்பக் கொளைவல் பாண்மகனெனினும்அமையும். எனவும், ஆங்கும் : அசைநிலை; பெற்றிசின்மூன்றும் படர்க்கைக்கண் வந்தன.


(கு - ரை.) 1. “அரிமுன்கை’‘ (கலித்.147 : 36). அரியென்பது ஐம்மைப் பொருளில்வருமென்பதற்கு இவ்வடிமேற்கோள்; தொல். உரி.சூ. 59, இளம்.; சூ. 60, சே.; சூ. 58, ந.; இ. வி. சூ. 290,‘அரி மயிர் முன்கை‘ என்பது அழகு; நேமி.சொல். 59, உரை.

5. “புல்லிலை வஞ்சிப் புறமதிலலைக்கும், கல்லென் பொருநை” (புறநா. 387 : 33 -4)

2 - 5. “மணற், செய்வுறுபாவைக்குக் கொய்பூத் தைஇத், தண் கய மாடு மகளிர்”(புறநா. 243 : 1 - 3)

6. பொருவென்பது, பயவுவமைபற்றிவருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம.சூ. 14, பேர்.; இ. வி. சூ. 642, உரை.

7 - 9. சின்னென்பது பால்காட்டும்எழுத்தோடு அடுத்து வருமென்பதற்கு மேற்கோள்;தொல். இடை. சூ 26, பேர்.

11 - 3. தொல். எச்ச. சூ. 53,தெய்வச். மேற்.

16. “அழல்புரிந்த வடர்தாமரை”(புறநா. 29 : 1)

15 - 7. எனவும் ஆங்கும்அசைநிலையாயின வென்பதற்கு மேற்கோள்; தொல்.இடை.. சூ. 47, தெய்வச்.

14 - 7. “இழைபெற்ற.....பெற்றிசினே;இஃது, ஈற்றயலடி மூச்சீர்த் தாகிவந்துசெந்தூக்கியற்றாகி இற்ற வஞ்சிப்பா” (தொல்.செய். சூ. 71, பேர்.)

11 - 7. பாடினி இழைபெறுதல், பாணன்பொற்றாமரை பெறுதல்: (கலித். 54 : 2, 85 : 2; புறநா.12 : 1, 29 : 1 - 5, 69 : 4 - 21, 126 : 1 - 3, 319 : 9 - 15, 364 : 1 - 3); “எரியகைந்தன்ன வேடிறாமரை, சுரியிரும் பித்தை பொலியச்சூட்டி, நூலின் வலவா நுணங்கரின் மாலை, வாலொளிமுத்தமொடு பாடினி யணிய” (பொருந. 159 - 62), “தலைவன்றாமரை மலைய விறலியர், சீர்கெழு சிறப்பின்விளங்கிழை யணிய” (மலைபடு. 569 - 70)

மு. “மகிழ்செய்தற்கட்காமம் நறவினும் சிறந்ததேயெனினும் இவள் குறிப்புஆராய்ந்தறியாமையின் யானது பெற்றிலேனெனக்குறிப்பெச்சம் வருவித்துரைக்க, ‘அரிமயிர்த்திரண்முன்கை’என்னும் புறப்பாட்டிற் குறிப்புப்போல” (குறள்,1090, பரிமேல்.) (11)


1. தொல்.வேற்றுமைமயங்கு. சூ. 11.

2. “பாடினி, பாடின பாணிக்கேற்ப” (பொருந. 47 - 8)