310
பால்கொண்டு மடுப்பவு முண்ணா னாகலிற்
செறாஅ தோச்சிய சிறுகோ லஞ்சியொ
டுயவொடு வருந்து மன்னே யினியே
புகர்நிறங் கொண்ட களிறட் டானான்
5முன்னாள் வீழ்ந்த வுரவோர் மகனே
உன்னில னென்னும் புண்ணொன் றம்பு
மானுளை யன்ன குடுமித்
தோன்மிசைக் கிடந்த புல்லண லோனே.

(பி - ம்.) 8 ‘புல்லனலோனே’

திணையும் துறையும் அவை.

பொன்முடியார்.


(கு - ரை.) 1. மடுப்ப - உண்பிக்க.

2. அஞ்சி - ஒருகுறுநில மன்னன். ஒடு -ஆல்.

1 - 2. “பிரசங் கலந்த வெண்சுவைத்தீம்பால், விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்,புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ, லுண்ணென்றோக்குபு புடைப்ப” (நற். 110 : 1 - 4)

3. உயவு - கவலை. இனி - இப்பொழுது.

4. ஆனான் - அமையானாகி. 5. முன்னாள்- முதல்நாள்.

6. புண்ணில் ஒன்றிய அம்பை யான்உன்னிலனென்பான்.

7. புறநா. 273 : 3; ஐங்குறு. 202.

8. தோல் - யானை; கேடகமுமாம். அணல்- தாடி; “மையணற்காளை” (புறநா. 83)

(310)