(பி - ம்.) 1 ‘வம்பகட்டு மார்பிற்’ திணை-அது; துறை-பூவைநிலை. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது. (இ - ள்.) ஆரந்தாழ்ந்த அழகுமிக்க மார்பினையும் முழந்தாளிலே தோய்ந்த பெரிய கையினையுமுடைய அழகுமாட்சிமைப்பட்ட வழுதி! நீ யாவர்க்கும் உவந்து அருளைப் பண்ணுதலைத் தெளிவாக வல்லை! மெய்யாக யாவரிடத்தும் தெளியாய், பெரும! பொய்யை; எந்நாளும் சுடும் வெம்மை யொழியாது கடலிடத்தே கிளர்ந்தெழுகின்ற ஞாயிற்றை ஒப்பை, நின் பகைவர்க்கு; எம்போல்வார்க்குத் திங்களை ஒப்பை-எ-று. தேற்றாயென்றது, 1தேறாயெனத் தன்வினையாய் நின்றது; தேற்றாயென்பதற்குப் பொய்தெளிக்கப்படாயெனினும் அமையும். ஞாயிற்றோடும் திங்களோடும் உவமித்தலையால், இது பூவைநிலைஆயிற்று. |