(கு - ரை.) 1. கண்பு - ஒருவகைக் கோரை ; "கண்பின், புன்காய்ச்சுண்ணம் புடைத்த மார்பின்" (பெரும்பாண். 220 - 21) ; "களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர" (மதுரைக்.172) ; "கண்பமல் பழனங் கமழ" (மலைபடு.454) ; "கண்பகத்தின் வாரணமே" (தே. திருஞா. தோணிபுரம், "வண்டரங்க" 3) 1. புறநா.333 : 3. 4. படப்பு = படப்பை - வைக்கோற்போர். 3 - 4. "புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பின்.....................மன்றிற் பாயும் வன்புலத் ததுவே" (புறநா.322 : 4 - 6) 6. ஆர்த்த - நிறைய உண்பிக்க ; "ஏதிலா ராரத் தமர்பசிப்பர்" (குறள், 837) 7. ஊணொலியரவம் - ஊணாலுண்டாகிய ஆரவாரம் ; "புள்ளிமிழ்ந்தன்ன, ஊணொலி யரவம்" (புறநா.173 : 3 - 4). கைதூவாள் - கையொழியாள் ; "கள்ளுண வாட்டியுங் கைதூ வாளே" : புறத்திரட்டிற்கண்டது இது. மனையோள் (5) கைதூவாள் (7) 11. காளை - தலைவன். 8 - 11. ‘ஒன்னார் யானை யோடைப் பொன்கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ", "அண்ணல் யானை யணிந்த, பொன்செ யோடைப் பெரும்பரி சிலனே" (புறநா. 126 : 1 - 2, 326 ; 14 - 5) (334)
|