395
மென்புலத்து வயலுழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல்லுவியற்
5பழஞ்சோற்றுப் புகவருந்திப்
புதற்றளவின் பூச்சூடி
............................................................
...................................அரியலாருந்து
மனைக்கோழிப் பைம்பயிரினனே
10கானக்கோழிக் கவர்குரலொடு
நீர்க்கோழிக் கூய்ப்பெயர்க் குந்து
வேயன்ன மென்றோளால்
மயிலன்ன மென்சாயலார்
கிளிகடியினனே
15அகலள்ளற் புள்ளிரீஇயுந்து
யாங்கப், பலநல்ல புலனணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பிற்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது
20நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும
முன்னா ணண்பகற் சுரனுழந்து வருந்திக்
கதிர்நனி செ....................................மாலைத்
தன்கடைத் தோன்றி யென்னுற விசைத்தலிற்
25றீங்குரல்......................................கி னரிக்குரற் றடாரியோ
டாங்குநின்ற வெற்கண்டு
சிறிதுநில்லான் பெரிதுங்கூறான்
அருங்கலம் வரவே யருளினன் வேண்டி
.....................யென வுரைத்தன்றி நல்கித் தன்மனைப்
30பொன்போன் மடந்தையைக் காட்டி யிவனை
என்போற் போற்றென் றோனே யதற்கண்
டவன்மறவ லேனே பிறருள்ள லேனே
அகன்ஞாலம் பெரிதுவெம்பினும்
மிகவானு ளெரிதோன்றினும்
35குளமீனொடுந் தாட்புகையினும்
பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி
விளைவொன்றோ வெள்ளங் கொள்கென
உள்ளது மில்லது மறியா
40தாங்கமைந் தன்றால் வாழ்கவன் றாளே.

(பி - ம்.) 3 'காழைச்சூட்டொடு நெடுவானைபல்லுவியற்' 5 'புகவருத்திப்' 11 'கூப்பெயர்க்குந்து' 13 'மென்சாயலாற்' 15 'புள்ளுரீஇயுந்து' 20 இருங்கோவெணமான்', 'னருஙகடலபபிடவூர்' 22 'ணன்பகற்' 24 'நன்கடை' 28 'அயருஙகலம்' 34 'ளெரிததொனகரினுங்' 35 'காட்புரையினும்' 36 'பெருமபெய்' 37 'கருணைச் சூளைசசூடகமாடுமாந்தி'

திணையும் துறையும் அவை.

சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தனை மதுரைநக்கீரர்.


(கு - ரை.) 1. மென்புலம் - மருதநிலம்.

2. வன்புலம் - முல்லைநிலம். விட்டு - மேய்தற்குவிட்டு.

3. குழைச்சூடு - குழைதலையுடைய சூட்டிறைச்சி.

4. உவியல் - அவியல்; "சாந்த விறகி னுவித்த புன்கம்" (புறநா.168 : 11)

5. புகவு - உணவு ; "வானிணப் புகவிற் கானவர்" (அகநா. 132 : 5) : இச்சொல் புகாவெனவும் வழங்கும்; "அகனாட் டண்ணல் புகாவே" (புறநா. 249 : 7) ; "புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை" (குறுந். 253 : 6)

6. "புதன்முல்லைப் பூப்பறிக்குந்து" (புறநா. 352 ; 4)

8. அரியல் - கள். ஆருந்து - உண்ணும்.

10. புறநா. 320 : 16.

11. ‘உம்' உந்தாதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். இடை. சூ. 44, இளம். சே.; ந.; நன். சூ.340, மயிலை.; நன். வி.சூ. 341 ; இ. வி. சூ. 244, உரை. 12. தோளால் - தோளோடு.

13. சாயல் - மென்மை ; "களிமயிற் சாயலுங் கரந்தன ளாகி" (சிலப். 8 : 87)

15. இரீஇயுந்து - கெட்டு ஓடும். 16. புலன் - இடங்கள்

17. சீர்சான்ற - தலைமையமைந்த ; "சீர்சான்ற வுயர்நெல்லினூர்" (மதுரைக். 87 - 8)

18. தித்தன் : ஒரு சோழன். 17 - 8. புறநா. 80 : 6, குறிப்புரை.

19. செல்லாநல்லிசை - கெடாத நல்லபுகழ் ; "செல்லா நல்லிசைப் பெயரொடு நட்டகல்" (மலைபடு. 388 - 9).

உறந்தை - உறையூர். குணாது - கிழக்கின்கண் உள்ளது.

18 - 9. "மாவண் டித்தன் வெண்ணெல் வேலி, உறந்தை யன்ன வுரைசா னன்கலம்" (புறநா. 352 : 9 - 10)

20. நெடுங்கை வேண்மானென்பது உழுவித்துண்போரில் ஓர் உபகாரியின் பெயர்.தொல். அகத்திணை. சூ.30, ந. மேற்கோள்.

21. அறப்பெயர் - அறத்தாலுளதாகிய புகழ்.

20 - 21. பிடவூரென்பது சோழநாட்டிலுள்ளதொரு வைப்புத்தலம். அதில் மாசாத்தனார் கோயில் ஒன்று உண்டு. அவர் பெயரே இப்பாட்டுடைத் தலைவனுக்கு அமைந்துள்ளதுபோலும்; கழறிற்றறிவார் நாயனார் திருக்கயிலாயத்திலே பரமசிவன் திருமுன்பு விண்ணப்பஞ்செய்து அரங்கேற்றிய திருவுலாப்புறத்தைக் கேட்டறிந்துவந்த மாசாத்தனார் அந்நூலை வெளிப்படுத்திய இடம் இவ்வூரே என்பர். இவ்வூரும் இத்தலைவன் பெயரும் பழையநூல் உரைகளிற் காணப்படுகின்றன ; "தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூரும்.................தம்முடைய காப்புக்களே" "பேரருளாளன் பிடவூரன்றம்மானே" (தேவாரம்) ; "சேரர் காவலர் விண்ணப்பஞ் செய்தவத் திருவுலாப் புறமன்று, சாரல் வெள்ளியங் கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்திந்தப், பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும், நாரவேளைசூ ழுலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே" (பெரிய. வெள்ளானை. 52) ; ‘அவருள், உழுவித்துண்போர், மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும்.....முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம்" (தொல். அகத்திணை. சூ. 30, .)

22. நண்பகல் - நடுப்பகல். 23. மாலை - மாலைக்காலத்தில்.

27. சிறிதும் - சிறிது நேரமும்.

34 - 5. எரி, குளமீன், தாள் என்பன வான்மீன் விசேடங்கள். இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலகவறுமைக்கு ஏதுக்கள்.

36. செய் - தொழில் ; "பெருஞ்செய் நெல்லின் முகவைப் பாட்டும்" (சிலப். 10 : 137 ; நன். சூ. 289, மயிலை. மேற்.) கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) ; நற். 258 : 6.

(395)