(பி - ம்.) 2 ‘பைங்கால்’ திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம். ............................மதுரைப் பேராலவாயார் பாடியது. தலைத்தோற்றமாவது:- ‘’உரவெய்யோ னினந்தழீஇ வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று” (பு. வெ.12) (இ - ள்.) மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடை யையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண் நீர் கொழித்து (பி - ம். கழித்து)க் கொடுவரப்பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; பகைவரது தூசிப்படையை முறித்துப் பெயர்ந்துபோகிற தனது படைக்குப்பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர் அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று. சாயல் - விடாயாலுண்டான மென்மை. என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக. |