138
ஆனினங் கலித்த வதர்பல கடந்து
மானினங் கலித்த மலைபின் னொழிய
மீனினங் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
5சிதாஅ ருடுக்கை முதாஅரிப் பாண
நீயே பேரெண் ணலையே நின்னிறை
மாறி வாவென மொழியலன் மாதோ
ஒலியிருங் கதுப்பி னாயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
10மரனணி பெருங்குர லனைய னாதலின்
நின்னை வருத லறிந்தனர் யாரே.

திணை - அது; துறை - பாணாற்றுப்படை.

அவனை மருதனிளநாகனார் பாடியது.

(இ - ள்.) பெற்றத்தினது இனம்மிக்க வழிபலவும் வந்து மான்றிரள் மிக்கமலைபின்கழிய மீனினந்தழைத்த துறைபலவற்றையும் நீந்திநினைந்து வந்த வள்ளிய ஓசையையுடைத்தாகிய சிறியயாழையும் சிதாராகிய உடையையுமுடைய மூத்தபாணனே!நீதான், அவன்பாற் சில கருதிப் போகின்றமையின்பெரிய எண்ணத்தையுடையை; நின்னுடைய தலைவன் இப்பொழுதுபோய்ப் பின் ஒருநாட் பரிசிற்குவாவென்று சொல்லான்;தழைத்த கரிய கூந்தலையுடைய ஆயிழைக்குத் தலைவன்,கிளி மருவிய அகன்ற புனத்தின்கண் மரப்பொதும்பின்கண்வைத்த பெரிய கதிரை யொப்பனாதலின், நீ அவன்பாற்பரிசில் பெற்றுவருதற்கண் நின்னைப் 1 பழையபாணனென்றுஅறிவார் யார் ?-எ - று.

'நின்னை வருதலறிந்தனர் யார்' என்றதன்கருத்து, நின்னை அறிவாரும் அறியாத தன்மையையாவையென்பதாம்.
அறிவார் யாரென்பது அறிந்தனர் யாரெனக் காலமயக்கமாயிற்று.

நினக்கு அவன் பரிசில் தப்பாமல் தருமென்பான், நின்னிறையென்றான்.

'கிளி..........குரலனையன்' என்றது கிளியீடு வாய்த்தாற்போல்வனென்னும் வழக்கைப்பற்றி நின்றது.


(கு - ரை.) 5. சிதார் - கந்தை.முதாரி - முதுமை; சிலப். 19 : 24. உரை.

4-5. புறநா. 69 : 3 - 4, 136 : 4 - 5.

7. "இரந்தோர்க் கெஞ்ஞான்றும்,காலம் பகராதார் காழிந் நகர் தானே" (தேவாரம்)

8. ஆயிழை கணவன் : புறநா. 3 : 6,குறிப்புரை.

(138)

1 பொருந. 96 - 100.