(கு - ரை.) 1. அணங்குடை நெடுங்கோடு: “அணங்குடை நெடுவரை” (அகநா. 22 : 1). அணங்கு - தெய்வம். கோடு - சிகரத்தையுடைய மலை; ஆகுபெயர். 1 - 4. புறநா. 78 : 1 - 4; திருப்பாவை, 23 : 1 - 5. 6. இன்னா - இனிதல்லாத. போர்வழுதி : உருபும் பயனும் உடன் தொக்க தொகை. இயல்தேர் : வினைத்தொகை. 7 - 8. “இதுநீ கருதினை யாயி னேற்பவர், முதுநீ ருலகின் முழு வதுமில்லை” (சிலப். 25 : 166 - 7) 9. “கொழுமீன் சுடுபுகை மறுகினுண் மயங்கி” (நற். 311); “தூமக் கொடியும்” (மணி. 6 : 64) 12. “மரஞ்சேர் மாடத், தெழுதணி கடவுள் போகலிற் புல்லென், றொழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை”, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” (அகநா. 167, 370); “அருந்திறற் கடவுட் டிருந்துபலிக் கந்தமும்”, “இலகொளிக் கந்தமும்” (மணி. 6 : 60, 24 : 162) ‘கலி’ என்பது ஒலித்தற்றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 458, மயிலை. 13. பலி - பூசை; நிவேதனமுமாம். பொதியில் - அம்பலம்; பொது இல் - பொதுவான இடம்; இலக்கணப் போலி. அம்பலத்தில் அமைக்கப் பெற்றுள்ள தூணில் தெய்வத்தை ஆவாகித்து வழிபட்டு வருதல் பண்டைக்கால வழக்கம்; “கந்துடைப் பொதியில்” (பட்டினப். 249) என்பதனாலறியலாகும்; மலைநாட்டிலுள்ள ஆலயங்கள் அம்பலமென்று இக்காலத்தும் வழங்கப்படுகின்றன. 14. நாய் - சூதாடுகருவியுளொன்று; “பளிக்குநாய் சிவப்பத் தொட்டு” (கம்ப. மிதிலைக்காட்சி. 17) 16. கானவாரணம் : புறநா. 320 : 11, 395 : 10. 15 - 6. பல்பொறிக் கானவாரணம் : “அந்நுண் பல்பொறிக், காமரு தகைய கான வாரணம் (நற். 21 : 7-8, மருதனிளநாகனார்) 14 - 6. “உமண ருயங்குவயி னொழித்த, பண்ணழி பழம்பார் வெண்குரு கீனும், தண்ணந் துறைவன்” (நற். 138) 13 - 6. “நரைமூ தாள ரதிர்தலை யிறக்கிக், கவைமனத் திருத்தும் வல்லுவனப் பழிய......பொதியில்” (அகநா. 377) 16 - 7. “கானங் கோழிக் கவர்குரற் சேவல், ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்ப” (குறுந். 242) கோழியை வாரணமென்றல் மரபென்பதற்கு மேற்கோள்; தொல். மரபு. சூ. 68, பேர். (52)
1. மூரிநிமிர்தல் - துயின்றெழுந்தவுடன் இரண்டுகைகளையும் நிமிர்த்துச் சோம்பைப்போக்குதல்; “மூரி நிமிர்வன போல” (பெருங். 2. 6 : 102); “பொய்த்ததோர் மூரியா னிமிர்ந்து போக்குவாள்” (கம்ப. உண்டாட்டு. 35); இக்காலத்துச் சோம்பல்முறித்தலென வழங்கும். 2. இன்னாத - பகைவர்களுக்கு இன்னாத; “இன்னா வாகப் பிறர் மண் கொண்டு” (புறநா. 12 : 4) என்பதையும் அதன் உரையையும் பார்க்க.
|