313
அந்த நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக்
காணிய சென்ற விரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினுங் கடவ
5உப்பொய் சாகாட் டுமணர் காட்ட
கழிமுரி குன்றத் தற்றே
எள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே.

(பி - ம்.) 4 ‘களிறொடு கடுந்தேர்’,‘கடல’, ‘கடவு’

திணை - அது; துறை - வல்லாண்முல்லை.

மாங்குடிகிழார்.


(கு - ரை.) 1. அத்தம் - அரிய வழி.பெருவிறல் - தலைவன்.

2. நச்சி - விரும்பி. 3. காணிய -காண்பதற்கு.

4. கலித். 50 : 15 - 7; கடவ - ஈதற்குரியன.

5. உப்பைக் கொண்டுசெலுத்துகின்றவண்டிகளையுடைய உப்பு வாணிகர்; ஒய்தல் - செலுத்துதல்;“உமணர், உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ” (புறநா.116 : 7 - 8)

2 - 6. “ஒன்னார், ஆரெயி லவர்கட்டாகவு நுமதெனப், பாண்கடனிறுக்கும் வள்ளியோய்”(புறநா. 203 : 9 - 11), “கிளைபொரு ளில்லான் கொடையேகொடைப்பயன்” (நாலடி. 65) என்பவற்றை இவ்வடிகளின்பொருள் நினைப்பிக்கின்றது.

7. அவன் கருதிய பொருள் இகழற்பாலதன்று;எள்ளுதல் - இகழுதல்.

மு. ‘வேந்தன் சீர்சால் சிறப்பெடுத்துரைத்தல்’ (தொல். புறத்திணை. சூ. 5, .)என்பதற்கு, ‘வேந்தற்குரிய புகழமைந்த தலைமைகளைஒருவற்குரியவாக அவன் படையாளரும் பிறரும் கூறல்’என்று பொருள் கூறி, இதனை மேற்கோள் காட்டி, இதுபடையாளர் கூற்றென்றும், இதற்கு முடிவேந்தன் சிறப்பெடுத்துரைத்தலென்றுகூறின் அது பொதுவியலிற் கூறலாகாதென்றுணர்கவென்றும்கூறுவர்.

(313)