396
கீழ்நீரான் மீன்வழங்குந்து
மீநீராற் கண்ணன்ன மலர்பூக்குந்து
கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து
5நெடுநீர்கூஉ மணற்றண்கான்
மென்பறையாற் புள்ளிரியுந்து
நனைக்கள்ளின் மனைக்கோசர்
தீந்தேற னறவுமகிழ்ந்து
தீங்குரவைக் கொளைத்தாங்குந்து
10உள்ளிலோர்க்கு வலியாகுவன்
கேளிலோர்க்குக் கேளாகுவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற் றெழினி யாதன்
கிணையேம் பெரும
15கொழுந்தடிய சூடென்கோ
வளநனையின் மட்டென்கோ
குறுமுயலி னிணம்பெய்தந்த
நறுநெய்ய சோறென்கோ
திறந்துமறந்து கூட்டுமுதல்
20முகந்துகொள்ளு முணவென்கோ
அன்னவை பலபல.................
..................ருநதய
இரும்பே ரொக்க லிருஞசெஞசிய
அழித்துவப்ப வீத்தோனெந்தை
25எம்மோ ராக்கக் கங்குண்டே
மாரிவானத்து மீனாப்பண்
விரிகதிர வெண்டிங்களின்
விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
30நிரைசா னன்கல னல்கி
உரைசெலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே.

(பி - ம்.) 2 ‘மலர்ப்பூஙகுநது' 5 ‘உண்டுநீர்கூறுமணற்' 6 ‘புள்ளிரிவுந்து' 12 - 6 ‘கழுமியவௌவெலியிலவளநீகிர வாடடெறறெழுனியாகென கிணைவெமபெறாயகழுமியவௌளையி' 17 ‘னிணமபெயதநதுறு' 19 ‘மறந்த' 23 ‘ரொககெல' 25 ‘ராககககஙகணடெ', ‘ராககககயங குணடே' 26 ‘மீனாலபபண'

திணையும் துறையும் அவை.

வாட்டாற்றெழினியாதனை மாங்குடிகிழார்.


(கு - ரை.) 1. வழங்குந்து - செல்லாநிற்கும்.

2. மேனீரில் கருங்குவளைமலர் பூக்கும்.

4. அரிப்பறை - ஒருவகைப்பறை ; அரித்தெழும் ஓசையையுடையது ; "அரிப்பறை வினைஞர்" ('ஐங்குறு.81) ; "அரிக்கூட் டின்னியம் கறங்க வாடுமகள்" (குறிஞ்சிப். 193) ; " அரிப்பறை யனுங்க வார்க்கும் மேகலை", "அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே" (சீவக.2082, 2688)

6. மென்பறை - மெல்லிதாகப் பறத்தலையுடைய குஞ்சு ; "வெண்டலைக் குருகின் மென்பறை விளிக்குரல்" (ஐங்குறு.86)

7. கோசர் - ஒருவகை வீரர் ; பதிற். 12 : 18.

8. கள்ளின் தெளிவை உண்டு.

10. உள் - ஊக்கம். 13. வாட்டாறு - ஓரூர்.

15. கொழுந்தடிய சூடு - கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சி.

19. கூடு - நெல் முதலிய தானியங்கள் வைத்துள்ள சேர்.

24. உவப்ப அழித்து ஈத்தோன் - மகிழும்படி மீட்டுங் கொடுத்தோன் ;"அழித்துப் பிறந்தனெ னாகி" (புறநா.383 : 16)

25. கங்கு - எல்லை.27. திங்களின் - சந்திரனைப்போல.

27 - 8. புகழுக்குத் திங்களுவமை.

31. உரை செல - புகழ்பரக்க.

(396)