(பி - ம்.) 5 ‘கடந்ததானைத்’ 6 ‘திண்டோள்’ திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. (இ - ள்.) தன்மனத்துள்ளே கறுவுகொண்டதாயினும் வெளிப்பட நின்று வெகுண்டதாயினும் உற்றுநின்று கையோடு மெய்தீண்டி வருத்திற் றாயினும் அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுவாரைப்போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்; பொன்னான் இயன்ற மாலையினையும் மண்டியபோரின்கண் எதிர்நின்று வெல்லும் படையினையும் திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று-எ - று. பொலந்தார் வளவனென இயையும். கூற்றம் இரந்ததாகல்வேண்டும்; இம்மூன்றினுள் ஒன்றுசெய்யினும் பிழைப்பின்றெனக் கூட்டுக. இஃது அவனாண்மை மிகுதியினையும் வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறு. |