(கு - ரை.) 1. சேவல் - ஆண்கோழி. எடுப்ப - எழுப்ப. ஏற்றெழுந்து - துயிலுணர்ந்தெழுந்து ; "தூமலர்க்க ணேற்க துயில்" (பு.வெ.197) ; "துயிலிடைக் கண்ட துணைநலத் தேவியை, இயல்புடையங்க ணேற்றபிற் காணாது" (பெருங். 4.7 : 91 - 2) 2. மு. புறநா. 374 : 4. உறைக்கும் - துளிக்கும். 3. நுண்கோற் சிறுகிணை : புறநா. 382 : 18 - 9. சிலம்ப ஒற்றி - முழங்க அடித்து. 4. பகடு - உழும் எருது; எருமைக்கடாவுமாம். 1 - 4. புறநா. 385 : 1 - 2. 6. குறுகல் - அடைதல். குறுகல்வேண்டி (6) ஏத்தினெனாக (5) 7. மு. புறநா. 209 : 3. 10 - 21. கலிங்கம் - ஒருவகை நல்லாடை. “நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந், தரவுரி யன்ன வறுவை” (பொருந. 82 - 3) ; “காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇ” (சிறுபாண். 236) ; “கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம்” (மதுரைக். 433) 9-11. காம்பின் கழை படு சொலியின் - மூங்கிலாகிய கோலின் உட்புறத்தே பெயர்த்தெடுக்கப்படும் வெள்ளிய தோல்போல. இழையணி வாரா - நெய்யப்பட்டுள்ள இழைகளின் வரிசை கண்ணுக்குப் புலப்படாத. சொலி : கலிங்கத்திற்கு உவமை. 12. வசிந்து - தலைவனை வயமாக்கி. உந்தி - கொப்பூழ் 16. அழித்து - மீட்டும். 17. படர்பு - செல்லுதல். 18. மறி - ஆட்டுக்குட்டி. 20. ஊகம் - ஒருவகைக் குரங்கு. 21. அவியன் - ஓர் உபகாரி ; “களிமலி கள்ளி னற்றே ரவிய, னாடிய விளமழை சூடித் தோன்றும், பழந்தூங்கு விடரகம்” (அகநா. 271 : 12 - 4) 23. அறான் - மேற்கூறிய தலைவன் தனது நிலைமை குன்றான். வெள்ளியதுநிலை எவன்பரிகோ - சுக்கிரனுடைய நிலைமைக்குச் சிறிதும் வருந்தேன் ; புறநா. 384 : 20, 386 : 24. (383)
|