(கு - ரை.) 1. "வணரமை நல்யாழ்" (பதிற். 41 : 2) 4. "பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சி" (பதிற்.26 : 10) 5. "வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு" (முருகு. 1-2) 4-5. நெருஞ்சிப்பூக்கள் சூரியனையே நோக்குதல் இயல்பு; "ஓங்கு மலைநாடன், ஞாயி றனையனென் றோழி, நெருஞ்சி யனையவென் பெரும் பணைத் தோளே" (குறுந். 315); " வானிடைச், சுடரொடு திரிதரு நெருஞ்சி போல" (அகநா.336); "வெஞ்சுடர் நோக்கு நெருஞ்சியில்" (இறை.சூ. 47, உரை, மேற், 296); "நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல்" (சீவக. 461); "அருந்தவர்க் காயினுந் திருந்துமுக மிறைஞ்சாது, செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப,் பொன்புனைமலர்" (பெருங்.2. 4 : 13 - 5); "ஏழுளைப் புரவியொ டெழுகதிர் நோக்கிய, சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூவென்ன" (கல்லாடம்,65 : 14 - 5) 6. "இலம்படு புலவ ரேற்றகை ஞெமர" (பரி.10 : 126); "இலம்படு புலவ ரேற்றகை நிறைய" (மலைபடு. 576). மண்டை : புறநா.103 ; 3, குறிப்புரை. 7. புறநா.154 : 13. 6-8. மண்டைமலர்தல் : புறநா.103. 3, 179 : 2 - 3, 393 : 4 - 5. (155)
1 "தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்" (தொல். புணரியல், சூ. 30)
|