(கு - ரை.) 1. விசித்த - கட்டிய. வார்பு - வாருதல். வள்பு - வார். 3.புறநா. 274 : 2. 4. உழிஞை - கொத்தானென்னும் கொடி; பகைவருடைய மதிலை வளைத்துக் கொள்வோர் அதற்கு அறிகுறியாக அணிதற்குரியது. அடை யாளப்பூக்கள் தலைவர்களுக்கேயன்றி அவர்களுடைய ஆயுதங்களுக்கும் அவர்களுடைய வாத்தியங்களுக்கும் சூட்டப்படுதல் மரபு; “வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகம்” (நெடுநல். 176) என்று பாண்டியனுடைய வேல் கூறப்பட்டிருத்தல் காண்க. 5. “குருதி வேட்ட, மயிர்புதை மாக்கண் கடிய கழற” (பதிற். 29); “கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை, முரசு” (மணி. 1 : 30 - 31) 1 - 5. “விரவிய சந்தமென் சேறு மட்டித்துப், பிரவியந் தழையொடு பிணையல் வேய்ந்தன, பரவிய பலிபெறு முரசம் பன்மையில், அரவியங் கதிர்கொள வதிர்ந்த றைந்ததே” (சூளா. சுயம். 210); பெருங். 2. 2 : 26 - 30. 7. மு. அகநா. 93 : 13. 14 - 5. புறநா. 27 : 7 - 9, குறிப்புரை; “புகழ்வெய் யோர்க்குப் புத்தேணாடெளிது” (முதுமொழிக். 71) 14 - 6. ‘ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு இன்பத்தைத் தந்து பூமியுள்ளளவும் நிற்பது புகழெனலுமாம்; ஒன்றாவுலகத்.........தொன்றிலெனவும், இவணிசையுடையோர்க்..................மாறுகொலெனவும் கூறினாராகலின்’ (சிலப். 11 : 112 - 7, அடியார்.) 15. உயர்நிலையுலகம் : மதுரைக். 197; கலித். 139 : 36. 16. மாறு, ஏதுப்பொருள் படுவதோரிடைச் சொல். தலைவனது உத்தம குணங்களைக் கூறினமையின், இஃது இயன்மொழியாயிற்று. மு. முரசுநாட்கோடலுக்கும் (சிலப். 5 : 89 - 94, அடியார்.), இயன்மொழிக்கும் (தொல். புறத்திணை. சூ. 35, ந.) மேற்கோள். (50)
1. “மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்”, “தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்” (புறநா. 35 : 3, 51 : 5)
|