(கு - ரை.) 1. பருத்திப்பெண்டு : புறநா.326 : 5; "ஆளில் பெண்டிர் தாளிற் செய்த, நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள" (நற். 353); 'நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளாற் கைவன் மகடூஉத் தனது செய்கை மாண்பினால் ஓரிழைப் படுத்தலாம் உலகத்து நூல் நூற்றலென்பது' (இறை. சூ. 1, உரை); "பஞ்சிதன் சொல்லாப் பனுவலிழையாகச், செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத, கையேவாயாகக் கதிரே மதியாக, மையிலா நூன்முடியு மாறு" (நன்னூல், சூ. 23) 2. 'நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை...........என இவை இருவகை யுகரமும் ஒற்றடுத்து உரியசையாயினவாறு' (தொல். செய். சூ. 10, பேர்.) 1 - 2. புறநா. 393 : 12 - 4; "இழுதி னன்ன வானிணம்" (மலைபடு. 244) 'இன்னுமவ்விலேசானே, நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறையென்றாற் போலச் சினமில்லதனை உள்ளது போலக் கூறுவனவுங் கொள்ளாமோவெனின், உணர்வுடையனவற்றுக்கல்லது சுவைதோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படாவென்பது. இது பிறன்கட் டோன்றிய பொருள்பற்றி வரும்" (தொல். மெய்ப்பாடு. சூ. 10, பேர்.) 7. புறநா. 366 : 14. ‘அழி - வைக்கோல்; ஆளழி வாங்கி யதரி திரிப்ப: இது சிலப்பதி காரம்: உழுத நோன்பக டழிதின் றாங்கு : இது புறநானூறு' (தக்க. 439, உரை); (தொல். உவம. சூ. 20, பேர். மேற்.) (125)
1. புறநா. 122 : 5, குறிப்புரை. 2. பெண்டாட்டி - பெண்; "மழையு மஞ்சும் வளியும் போலும், செலவினா ளொருபெண்டாட்டி" (தகடூர்யாத்திரை); 'ஒருபெண்டாட்டி தமரொடு கலாய்த்து' (இறை. சூ. 1, உரை) 3."தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு" (குறள், 212) 4. "நீறுமேற் பூத்த நெருப்பு" (பு. வெ.166)
|