(கு - ரை.) 1-2. “மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை, அணி முலைத் துயல்வரூஉ மாரம் போலச், செல்புன லுழந்த சேய்வரற்கான்யாறு” (சிறுபாண். 1 - 3); “அலைநீ ராடை மலைமுலை யாகத், தாரப் பேரியாற்று மாரிக் கூந்தற், கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை” (சிலப். 5 : 1 - 3) 3. “கடவுட் கற்பின் மடவோள்” (அகநா. 314 : 5) 4. “மணிபுரை செவ்வாய்” (கலித். 79, 81; அகநா. 16, 66) 3-6. “கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய, புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பி, னன்ன ராட்டிக் கன்றியு மெனக்கு, மினிதா கின்றாற் சிறக்கநின் னாயுள்” (அகநா. 184 : 1 - 4) 7. கனவினரற்றல் : கலித்.24 : 7 - 12. 8. ஏமாத்தல் : புறநா. 101 : 9, குறிப்புரை; கலித். 80 : 14. 11. கண்ணியை வாழ்த்தல் : “வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி” (மணி. 5 : 28); “வாழ்கநுங் கண்ணி மாதோ” (சீவக. 1890) 14. கலித். 80 : 14 - 5. தொல். கற்பு. சூ. 6 18-22. பன்மைக்கு மணலையும் நீர்த்துளிகளையும் உவமம் கூறுதலை, “எத்துணை யாற்று ளிடுமண னீர்த்துளி, புற்பனி யுக்க மரத்திலை நுண்மயி, ரத்துணை யும்பிற ரஞ்சொல்லி னார்மனம், புக்கன மென்று பொதியறைப் பட்டார்” (வளையாபதி) என்னுமிடத்தும் காண்க. 23. புறநா. 55 : 17, குறிப்புரை. 25. “தற்பாடிய தளியுணவிற், புள்” (பட்டினப்.3-4.); (கலித். 46 : 20 - 21, 146 : 52 - 3); “மலையுறை பகைத்து வானுறைக் கணங்கும், புட்குலஞ் சூழ்ந்த பொருப்பு”, “அளிகார்ப் பாடுங் குரனீர் வறந்த, மலைப்புட் போல” (கல். 53 : 10 - 11, 95 : 11 - 2) 26. ‘அடியுறை’ என்பது அடியேன் என்னும் பொருளில் அக்காலத்து வழங்கியது என்று தெரிகிறது; (புறநா. 67 : 12, குறிப்புரை; கலி. 56 : 4) (198)
1.புறநா. 91 : 5 - 6; “ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்”; “ஆலமர்செல்வன்” (கலித். 81, 83); “ஆல்கெழு கடவுள்” (முருகு. 256) “ஆலமர் செல்வன்” (சிலப். 24); மணி.3 : 144; சிறுபாண். 97. 2. புறநா. 196 : 10, உரை. 3. பதிற். (90) : 51 - 3.
|