(கு - ரை.) 2. விளரி, நெய்தற்குரித்தாகலின், இரங்கற்பண்ணாயிற்று. 15 - 9. "வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக், கோள்வாய் மதிய நெடியான்விடுத் தாங்கு மைந்தன், தோள்வாய் சிலையினொலியாற்றொறு மீட்டு மீள்வான், நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்” (சீவக.454) 20 - 21. "படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து”, ‘’பாம்புரிபோன் முற்றத் துறந்து” (சீவக. 1546, 3039) 23. புறநா. 4: 6, 169: 10 - 11. 25 - 8.புறநா. 249: 12- 4; 264: 1 - 4. மு.ஆபெயர்த்துத்தருதலென்னும் துறைக்கு மேற்கோள்காட்டி, ‘இதனுள் தன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக்கூறியது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 5, ந. (260)
1. அகநானூறு, 317.
|