திணை - அது; துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ - ள்.) நள்ளி! வாழ்வாயாக; நள்ளி! நள்ளென்னும் ஓசையையுடைய மாலைப்பொழுதின்கண்ணே மருதமென்கின்ற பண்ணை வாசித்துக் காலைப் பொழுதின்கண் கைவழியாகிய யாழின்கட் செவ்வழியென்னும் பண்ணை வாசித்து வரலாற்றுமுறைமையை எம்முடைய பாணர் சாதியிலுள்ளோர் மறந்தார்; அவ்வாறு மறந்தது, நீ கொடுத்து ஓம்புதலைக் கடனாக மேற்கொண்ட வண்மையான்-எ - று. கையகத்து எப்பொழுதும் இருத்தலான், யாழைக் கைவழியென்றார், ஆகுபெயரான். 'வரவவர் மறந்தனர்' என்பதூஉம் பாடம். |