(கு - ரை.) 2. சிதார் - கந்தை. இரவலர் பலவின்கீழ்த் தங்குதல் : புறநா. 128 : 1 - 2. 1-2. "நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன, நிலந்தின் சிதாஅர்" (பதிற். 12 : 19 - 20) 6. "முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி, மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப" (முருகு. 84 - 5) 7. வல்வில் வேட்டுவன்: ஒரேகாலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி அம்பையெய்யும் விற்றொழிலையுடைய வீரனை வல்வில்லி யென்றல் மரபு; இதனை, புறநா. 152 : 1 - 6-ஆம் அடிகளாலும் அவற்றின் குறிப்புரையாலுமுணர்க. 8. "கைகவியாச் சென்று' (அகநா. 9 : 21) 9. "இழுதி னன்ன வானிணஞ் செருக்கி" (மலைபடு. 244) 12. ஞெலிதீ : புறநா. 247 : 2. 13. புறநா. 320 : 14, 378 : 23, 391 : 19, 393 : 10. 15. புறநா. 136 : 12. 19. காட்டுநாடு: "வன்புலக் காட்டுநாட் டதுவே" (நற். 59); பாண்டிநாட்டின் உள்நாடொன்றற்குக் காட்டுநாடென்று பெயர் வழங்கியதாகத் தெரிகின்றது; திருவால. 44 : 54. 21. "மடைசெறி கடகத் தோளான் (சூடாமணி.9 : 10) 24. இசின்: தன்மைக்கண் வந்தது ; புறநா. 22 : 36, 151 : 7; “கேட்டிசி னல்லனோ" (நற். 115) 25. "உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந" (புறநா. 139 : 8) என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. 27. புறநா.137 : 11; "பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி" (குறிஞ்சிப். 57, குறிப்புரை) 28. "நளிமலை நாட னள்ளியும்" (சிறுபாண். 107) ‘நளி' என்னும் உரிச்சொல் பெருமையையுணர்த்தியதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 24, சே.; சூ. 26, தெய்வச்.; சூ. 22, ந.; இ. வி. சூ. 284, உரை. இப்பாட்டில் நள்ளியென்னும் வள்ளலுடைய கம்பீரமும் குறிப்பறிந்தீதல் முதலிய நற்குணங்களும் தெள்ளிதிற் புலப்பட நின்ற அழகு மிகப் பாராட்டற் பாலது. (150)
|