(கு - ரை.) 1. சினை - தழையையுடையகிளையை. காஞ்சி - காஞ்சிப்பண்; புறநா. 281 : 5. 2. ஐயவி - வெண்சிறுகடுகு; “ஐயவிபுகைப்பவுந் தாங்காது” (புறநா. 98 : 15) 1 - 2. புண்பட்டோரைப் பேய்கள்அணுகாதிருத்தற் பொருட்டு வேப்பந்தழையை வீட்டின்முன்இறப்பிற் செருகுதலும் காஞ்சிப் பண்ணைப்பாடுதலும் ஐயவியைப் புகைத்தலும் மரபு : புறநா. 98: 15, 281 : 1 - 6. 5. நெடிது - நெடுநேரம். போர்க்குச் சென்ற ஏனைவீரர் தம்மிடத்தைஅடைந்தும் ஒருவீரன் வாராமலிருக்க அவன் தேர்மட்டும்தாமதித்து வந்ததைக் கண்ட அவன் தாய் கூறியது; கண்டோர்கூறியதுமாம். (296)
|