271
நீரற வறியா நிலமுதற் கலந்த
கருங்குர னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்லிழை மகளி ரைதக லல்குற்
றொடலை யாகவுங் கண்டன மினியே
5வெருவரு குருதியொடு மயங்கி யுருவுகரந்
தொறுவாய்ப் பட்ட தெரிய லூன்செத்துப்
பருந்துகொண் டுகப்பயாங் கண்டனம்
மறம்புகன் மைந்தன் மலைந்த மாறே.

(பி - ம்.) 1 ‘நீனற வறியா நிலமுதற்கரந்த’ 2 ‘கருங்கா னொச்சிக் கண்ணார் குவவுத்தழை’3 ‘மெல்லி மகளிர்க் கல்குற்’ 6 ‘தெற்றுவாய்ப்’6 - 7 ‘லுரன்செத்துப், பருந்துகண் டுவப்பவும்’

திணை - நொச்சி; துறை - செருவிடைவீழ்தல்.

வெறிபாடிய (பி - ம். வெறியாடிய) காமக்கண்ணியார்.


(கு - ரை.) 1. நீரறவறியா: புறநா.1: 12.

2. புறநா. 272: 1; “மாக்குர னொச்சி”(நற். 305: 2; அகநா. 117: 1); “கருங்குர னொச்சி”(தகடூர்யாத்திரை)

1 - 4. புறநா. 272: 1 - 5; “ஐதக லல்குற்றழையணிக் கூட்டும், கூழை நொச்சி” (அகநா.275: 16 - 7)

5 - 7. புறநா. 33: 12- 4; “தீயினன்ன வொண்செங் காந்தட், டூவற் கலித்த புதுமுகையூன்செத், தறியா தெடுத்த புன்புறச் சேவல்” (மலைபடு.145 - 7)

மு. உழிஞைத்திணைத்துறைகளுள்,‘அகத்தோன் வீழ்ந்த நொச்சி’ என்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 11, இளம்.

(271)