(கு - ரை.) 2. முன்வாயிலிற் படுத்துக்கிடந்தமிக்க களிப்பினை யுடையானுக்கு. 3. அதள் - தோல். இதிற் சிலசாதியார்படுத்தல் இயல்பு; அது, “மான்றோற் பள்ளி மகவொடுமுடங்கி” (பெரும்பாண். 89), “உழைய தட்பள்ளி,உவலைக் கண்ணி வன்சொ லிளைஞர்” (மதுரைக்.310 - 11), “வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழைத்,தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை” (அகநா.58 : 4 - 5), “சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற்சிறுதுயிலே” (திருச்சிற். 398) என்பவற்றாலும்அறியலாகும். 4. வல்லே - விரைவாக. 7. துயிலேற்பினன் - துயிலேற்றலையுடையான்.ஆதலால் அக்களி யாளனுக்கு யாதுண்டாயினும் வல்லேகொடுமினென்க. (317)
|