(கு - ரை.) 1. மு. புறநா. 235 : 17; குறுந். 176 ; பற்றுக்கோடாகிய என் தலைவன் எங்கேஉள்ளானோ? 2. பாட்டோனென்பது சுட்டுப்பொருளது. 3. வம்பலன் - அயலான். உதுக்காண் -அவ்விடத்தே பார்; ‘’எவன்விரைந்து சேறியுதுக்காண்” (கலித். 108, : 39) 4. வேனல் - வேனிற்காலம். வரியணில்- முதுகில் மூன்று வரிகளையுடைய அணிற்பிள்ளை; “மூவரியணில்” (தொல். மரபு. சூ. 6) வாலம் - வால். 5. ஊகு - ஊகம்புல். வீ - பூ; எழுவாய். 4 - 5. அணில்வால் ஊகம்புல்லிற்குஉவமை. 7. உமணர் - உப்புவாணிகர். 8. யாருமில் ஒருசிறை - ஒருவரும் இல்லாதஒருபக்கத்தில். 9. பகடு - எருது. தெறுவர் - பகைவர். 10. பெரிய உயிர்களைக்கவருகின்றான். பட்டோன் (2) பேருயிர் கொள்ளும்(10) மு. தும்பைத்திணைத்துறைகளுள்,‘களிறெறிந் தெதிர்ந்தோர்பாடு’ என்றதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம். (307)
|