333
நீருட் பட்ட மாரிப் பேருறை
மொக்கு ளன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதற் றுள்ளுவன வுகளும்
5தொள்ள மன்றத் தாங்கட் படரின்
உண்கென வுணரா வுயவிற் றாயினும்
தங்கினிர் சென்"மா புலவிர் நன்றும்
சென்றதற் கொண்டு மன"யாள் விரும்பி
வரகுந் தினையு முள்ளவை யெல்லாம்
10இரவன் மாக்க ளுணக்கொளத் தீர்ந்தெனக்
குறித்துமா றெதிர்ப்பை பெறாஅ மையிற்
குரலுணங்கு விதைத்தினை யுரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன் றோவில டன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு........
15............................... உடும்புசெய்
பாணி நெடுந்தேர் வல்லரோ டூரா
வம்பணி யானை வேந்துதலை வரினும்
உண்பது மன்னு மதுவே
பரிசின் மன்னுங் குரிசில்கொண் டதுவே

(பி - ம்.) 7 ‘தங்கிநீர்' 13 ‘புறப்படனறோவிலளே' 15 ‘உழுமெபு செய்' 16 ‘வலவரோடூர'

திணையும் துறையும் அவை.

..................................................................


(கு - ரை.) 1. உறை - துளி.

2. மொக்குள் - சேற்றிலெழுந்த கொப்புளம்.

3. "நெடுஞ்செவிக் குறுமுயல்" (புறநா.334 : 2, 339 ; 4 ; பெரும்பாண்.115)

1 - 3. "சிறியிலை நெல்லிக் காழ்கண் டன்ன, குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்" (அகநா.284 : 1 - 2) ; சீவக. 3042.

4. புதல் - புதரில்.

5. தொள்ளை - துவாரம். மன்றம் - இரவலர் தங்குதற்குரியது.

6. உயவு - வருத்தம்.

7. சென்மோ - செல்லும்; செல்லுமென்னும் ஏவற்பன்மை உயிர்மெய் கெட்டு ஓகாரம் பெற்றுவந்தது; "வருங்குலங் கேண்மோ" (மணி.13 ; 93) என்றாற்போல.

8. மனையோள் - தலைவி ; புறநா.331 ; 8, 334 : 5. சென்றதற் கொண்டு - வந்ததனால்.

10. தீர்ந்தென - தீர்ந்தனவாக. குறித்துமாறெதிர்ப்பை - குறியெதிர்ப்பை ; ‘குறியெதிர்ப்பையாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது' என்பர் (குறள்,221, பரிமேல்.) ; "கூற்றுங் குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே....களிறு" (முத்தொள்ளாயிரம்)

9 - 10. "வரகுந் தினையு முள்ளவை யெல்லாம், இரவன் மாக்க ளுக்கீயத் தொலைந்தன" (புறநா.328 ; 3 - 4)

8 - 13. "இல்லது படைக்கவும் வல்ல னுள்ளது, தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள், நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும், இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில, வரிசையி னளிக்கவும் வல்லன்", "மனையோள், பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கைதூவாளே" (புறநா. 331 : 6 - 10, 334 ; 5 - 7)

14. வேட்டக்குடி - வேட்டுவர் வீடு.

15 - 6. உடும்புசெய் பாணி - உடும்புத் தோலாற் செய்த கைச்சரடு.

17. வம்பு - கச்சு.

19. கொண்டது பரிசில் - பகைவரோடு போர்செய்ததற்காக அரசரிடம் பெற்ற பொருளே பாணர் முதலியோர்க்கு அவன் கொடுக்கும் பரிசிலாகும்.

(333)