339
வியன்புலம் படர்ந்த பல்லா நெடிவேறு
மடலை மாணிழ லசைவிடக் கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
5நெடுநீர்ப் பரப்பின் வாளையொ டுகளுந்து
தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்
கடலாடிக் கயம்பாய்ந்து
கழிநெய்தற் பூக்குறூஉந்து
பைந்தழை துயல்வருஞ் செறுவிறற........
10..............................................லத்தி
வளர வேண்டு மவளே யென்றும்
ஆரம ருழப்பது மமரிய ளாகி
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.

(பி - ம்.) 1 - 2. ‘வெறறி, மடலை’ 12 ‘ஆரமரொழிப்பதுவுமமரிய’

திணையும் துறையும் அவை.

...........................................................................


(கு - ரை.) 1. புலம் - மேய்தற்குரிய நிலம்.

2. அசைவிட - அசையிட.

1 - 2. ஏறு அசைவிட.

3. பூப்பறிக்குந்து - பூக்களைப் பறிக்கும் ; "புதன்முல்லைப் பூப்பறிக்குந்து" (புறநா.352 : 4)

4. கோலாலெறிந்த முயல் ; "மாலை வெண்காழ் காவலர் வீச, நறும்பூம் புறவி னொடுங்குமுய லிரியும்" (ஐங்குறு.421)

5. உகளுந்து - துள்ளும்.

6. தொடலை - மணிக்கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை.

8. பூக்குறூஉந்து - பூக்களைப் பறிக்கும் ; குறுதல் - பறித்தல்.

12. அமரியளாகி - விரும்பியவளாய்.

13. முறம்போலும் காதுகளையுடைய யானை ; "முறஞ்செவி வாரணம்" (கலித்.42 : 2 ; சிலப். 10 : 248) ; "முறஞ்செவி யானையுந் தேருமாவும்" (மணி. 19 : 121)

(339)