(கு - ரை.) 1. தழை - தளிர்களாலும் பலவகைப் பூக்களாலும் அமைக்கப்பட்ட ஒருவகை ஆடை ; "அம்பூந் தொடலை யணித்தழை" (புறநா. 341 : 2) ; "தழையுங் கோதையு மிழையு மென்றிவை, தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும், மடமொழி யாயத் தவருள்" (கலித். 102 : 5 - 7) 2. குரலங்குன்றி - குன்றிமணிக் கொத்தினை. 7. "பனைக்கை மும்மத வேழ முரித்தவன்" (தே. திருநா. கோயில். ‘பனைக்கை’ 1 ) 8. கரந்தை - ஒருவகைப்பூடு. செறு - வயல். 7 - 8. "காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல், வந்திறை கொண்டன்று தானை" (பதிற். 40 : 5 - 6) (340)
|