(கு - ரை.) 2. உயிர்க்கு - உயிரைக் கைக்கொண்டு செல்லுதற்கு. ஆரா - தெவிட்டாத. கூற்றம் : விளி. 3. அஞ்சலன் - அஞ்சான். 5. கலம் - ஆபரணம். நீர் - தாரைநீர். 4 - 5. "ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப், பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து" (புறநா.367 : 4 - 5) 6. நன்று - மிக. 7. மா - குதிரையை. 12. பொலந்தாமரை - பொற்றாமரை. 13. இருக்கையால் - இருக்கையின்கண். 15. வல்லென - விரைய; வற்கெனவுமாம். 16. நல்கின் - பேசின். 15 - 6. பல்லின் கூர்மைக்கு அஞ்சி நா விரையப் பேசாதென்பது; "அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த, வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவை" (குறுந்.14) (361)
|