232
இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழு நாளே
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
5கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே.

திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - தும்பை; துறை - பாண்பாட்டு)

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக ; யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஒருபயன்படாமையின் அவை யல்லவாக; நடப்பட்ட கல்லின்கட் பீலியைச் சூட்டி 1நாரால் அரிக்கப்பட்ட தேறலைச் சிறிய கலத்தான் உகுப்பவும் அதனைக் கொள்வனோ, கொள்ளானோ சிகரமோங்கிய உயர்ந்த மலைபொருந்திய நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்?-எ - று.

நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத்துகுப்பவும் கொள்வன் கொல்லோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.


(கு - ரை.) 1. இல்லாகியர் : புறநா. 190 : 5. ஆகியர் - வியங்கோள்.

3. புறநா. 264 : 3 - 4. நார் - பன்னாடை.

(232)


1.புறநா. 297 : 5 - 6.